வெள்ளியங்கிரி மலை மீதுலாவினோம்
1
--------------------------------------------------------------------------------------------------------------------
நடைபயணங்களும் மலைமீது ஏறுவதும் நமக்கு புதிதல்ல!
நடைபயணங்களும் மலைமீது ஏறுவதும் நமக்கு புதிதல்ல!
ஏறக்குறைய 8 ஆண்டுகளுக்கு முன்வரை வாரம் ஒரு முறையோ அல்லது மாதம் ஒரு முறையோ மலை மீது ஒரு குழுவாக நமது அன்பிற்கினிய சிவக்குமார் தலைமையில் ஏறுவது வழக்கமாக இருந்தது.
ஆனால் அவையெல்லாம் தாவரவியல் பயணங்கள்! சராசரியான நபர்களுக்கு சலிப்பூட்டும் பயணங்கள்.
ஆனால் ஒரு ஆண்மீக பயனம் குறிப்பாக மலை மீது ஏறும் ஆண்மீக பயனம் (சபரி மலை, கைலாஷ் யாத்ரா, நரசிம்மர் குகை) அப்படியல்ல! நினைத்தவுடன் செல்ல முடியாது! கடுமையான விரதங்களும் தேவை.
இரண்டு வருடங்களுக்கு முன்பிருந்தே தங்கவேல் சார் வெள்ளியங்கிரி சென்றபோதே கூப்பிட்டார், கூப்பிட்டுக்கொண்டிருந்தார், பல்வேறு சாக்கு போக்குகளை கூறி இரண்டுவருடமாக தள்ளிவைத்த பயணம் இம்முறை முடிவானது.
விரதமெல்லாம் வேண்டாம், காலையில் மறக்காமல் வாங்கிங் மட்டும் செல்லவேண்டும் என்று கூறிவிட்டார்.
நாம் வழக்கம்போல அதை காற்றில் பறக்கவிட்டு நித்திய சுகவாசியாக இருந்தோம். பிறகு பயனத்திற்கு தேவையான பொருட்கள் வாங்கவேண்டும் என கூறி குளுக்கோஸ், பழங்கள், வாலினி ஸ்ப்ரே, மாத்திரைகள், கால் முட்டிக்கு க்நீ பேண்ட் ஆகைவற்றை வாங்கினோம். க்நீ பேண்ட் மற்றும் வாலினி மருந்தினை பார்த்த உடனே பதற்றம் அடைந்தேன். விஷயம் அவ்வளவு எளிதானது அல்ல என புரிந்தது.
அந்த நாள் வந்தது. 17.04.2015 அன்று காலை கிளம்பி, மாலை ஈஷா மையத்தினை அடைவது. பின் இரவு மலையேற தொடங்கி மறுநாள் இறங்குவது. இது தான் பயணத் திட்டம்.
17ஆம் தேதி காலை டீம் லீடர் சுப்ரமணியன் சார் கூப்பிட்டு 1.30 மணிக்கு வண்டி புறப்படும் என கூறினார். நான் 10 மணிக்கே தயாராக இருந்தேன். தங்கவேல் சார் பரமத்தியில் ஏறுவதாக திட்டம்.
சரியாக ஒரு மணிக்கு சுப்பரமணியம் சாருக்கு போன் செய்து எங்கு வரவேண்டும் என கேட்டேன். அவர் நாமக்கல் ஈஷா மையத்தில் வண்டி வந்து விட்ட்து நீங்கள் வீட்டிற்கு அருகில் ஏறிக் கொள்ளலாம் என்றார். மேலும் வண்டி கிளம்பும் போது நான் சொல்கிறேன் பிறகு வந்தால் போதுமென்றார்.
மணி 1.30 ”சார் வண்டி கிளம்பியாசா?”
“இல்ல மகேஷ் இன்னும் 10 நிமிசத்தில் கிளம்பியிருவோம், போன் பன்றேன்”
மணி 1.45 மீண்டும் ”சார் வண்டி கிளம்பியாசா?”
“அவ்வளவுதான் இன்னும் 20 நிமிசத்தில் கிளம்பியிருவோம், போன் பன்றேன்”
மணி 2.00 “சார் இன்னுமா கிளம்பல??” மீண்டும் அவ்வளவு தான் என்றார்.
மணி 2.30 “ சார் நா வேனுமுனா நம்ம செண்டருக்கு வந்திரவா??” “ தேவையில்ல இருந்தாலும் வாங்க”என்றார்
சட்டெனெ உறைத்தது “ ஆகா இது இண்டியன் டைம்ல கிளம்புற பயணம்போல”
ஏனெனில் உலகில் அனைத்து கடிகாரங்களும் நேரத்தினை அடிப்படையாக கொண்டவை. இந்திய கடிகாரம் மட்டும் நம்பிக்கையினை அடிப்படையாக கொண்டது. திருவருள் கூட்டுவிக்கும்போது தானாக நேரம் வரும். மேலும் ஈஷாவில் ஒரு வகுப்பு மட்டுமே கலந்து கொண்டதால், நேர விஷயத்தில் சற்று பிடிவாதமாக இருந்தேன்.
ஏற்பாட்டாளர்கள் ஈஷாவில் பல வகுப்புகள சந்தித்து இந்திய நேரத்தில் செயல்படும் பேறு பெற்றனர்.
2.45க்கு செண்டரில் இருந்தேன். புறப்படுவதற்கான எவ்வித அறிகுறியும் இன்றி எண்ணி 5 பேர் வட்டமாக அமர்ந்திருந்தனர். நான் வட்டத்திற்கு சற்று வெளியே அமர்ந்தேன்.
ஆற அமர தேங்காய்க்கு துணி சுற்றிக்கொண்டிருந்த சுப்பரமணியம் சாரிடம் “ சார் வண்டி கிளம்ப லேட்டாகுமா? என்றேன்” ”இல்ல மகேஷ், வரகூரிலிருந்து ஒருத்தர் வர்ரார், அவருக்கு தகவல் கிடைக்கல, வந்த உடன் கிளம்பலாம்” என்றார்.
’சார் மொத்தம் அப்ப 7 பேர்தானா? ’ என்றேன்.
’இல்ல 21 பேர்’ என்றார். பீதியடைந்தேன்
‘ அவங்கெல்லாம் எங்க சார் ஏறுவாங்க’ ,என்றேன்.
சுப்ரமணியம் சார் தனது ஒரு மண்டல சாதனையான கருந்தாடியினை நீவிவிட்டு மென்மையாக சிரித்தார். எனக்கு பாத்ரூம் போக வேண்டுமென
தோன்றியது.














2 -------------------------------------------------------------------------------------------------------------------------
பிறகு 3 மணிக்கு நண்பர் தனசேகரன் வந்தார். ஒரளவு கூட்டம் கூடியதும், வெகு நேரமாக வெயிலில் நிற்கும் வண்டியில் பையை வைக்கலாம் என்று எண்ணி பிறகு வண்டி கிளம்பும் போது செல்லலாம் என விட்டுவிட்டேன்.
சரியாக 3.30 மணிக்கு கிளம்பலாம் என்றார்கள்.
ஈஷாவின் மேலுல்ல நம்பிக்கையால் சீட் போடவில்லை விளைவு கடைசி சீட்டில் கடைசி இடம் கிடைத்து.
நான் செண்டரில் உட்கார்ந்திருந்த நேரத்தில் கிடைத்த பொருளை வைத்து நண்பர்கள் சீட் பிடித்திருந்தனர்.
எனக்கு நமது பண்பாடு மற்றும் கலச்சாரத்தின் மேலுல்ல நம்பிக்கை மேலும் திடமானது. வண்டி உறுமியது, பல்லை பிடுங்குவது போல ஆக்ஸிலேட்டரை ட்ரைவர் பதம்பார்த்து கொண்டிருந்தார்.
சுப்ரமணியம் சார் பதறினார், “ வண்டிய நிறுத்தப்பா, இண்ணும் 2 ஆள் வரனும்” என்றார்
”எங்க சார் போய்டாங்க, போன போடுங்க’ என்றார் ஒருவர்.
ஒரு அரை மணி நேர போராட்டத்திற்கு பிறகு வாட்ட சாட்டமான இரு இளைஞர்கள் வந்து சேர்ந்தனர்.
என் பக்கத்தில் உட்கார்ந்திருந்த நண்பர் கருப்பண்ணனிடம் ஐபோனை நோண்டியபடி “அப்படி ஒன்னும் லேட்டாகல” என்றார்கள்.
கண்ணை மூடி தூங்க முயற்சித்தேன்.
பரமத்தியில் தங்கவேல் சார் மேலும் இருவரை கூட்டிக்கொண்டு ஏறினார். அவர் முன் சீட்டில் உட்கார்ந்துகொள்ள நான் மீண்டும் தூங்க முயற்சித்தேன்.
பலவித குழப்பமான கனவுகள், வண்டி அசுர வேகத்தில் போவதாக தோன்றியது. கண் திறந்து பார்த்தால் அப்போதுதான் வேலாயுதம்பாளையத்தினை வண்டி தாண்டியது.
வண்டி கோவை தாண்டும் போது மேகம் இருட்டிக்கொண்டு மின்னலை இறக்கிக்கொண்டிருந்தது. சற்று நேரத்தில் தூறல் பெரிதாகி மழை கண்ணாடி சன்னலில் மோதி வழிந்தது. “ மழை பெய்தால் ஏறமுடியாது. அடிவாரத்துடன் திரும்பவேண்டியதுதான் “ என்றார்கள். மேலும் பாதி மலை ஏறி மழையில் மாட்டிகொண்டவர்கள் 2 நாட்கள் அப்படியே அசையாமல் இருந்து பின் மீண்டு வந்தததையும் தெரிவித்தனர். ஒரு 20 கி.மீ தாண்டியபின் மழை இல்லை ஆனால் பின்னால் துறத்திக்கொண்டு வருவது போல குளிர்காற்று வீசியது.
பேரூர் தாண்டி ஒரு பேக்கரியில் பிரட்பாக்கெட்டுகள் வாங்கப்பட்டது. எதற்கு என்றேன். நாளைக்கு சாப்பிட என்றனர். ஒரு வழியாக 7 மணிக்கு வண்டி ஈஷா மையத்தினை அடைந்தது.
எப்போது சென்றாலும் புதிய கட்டமைப்பில் இருப்பது ஈஷாவின் சிறப்பு. 4 ஆண்டுகளுக்கு பிறகு வருகிறேன் ,நிறைய மாற்றங்கள்.
தங்கவேல் சார் தீர்த்த குண்டத்தில் குளிப்பதற்கான சீட்டுகளை வாங்கி வந்தார். முதலில் ஒரு பொது குளியறையில் குளித்த பின்புதான் சிறிய குளம் போன்ற சூரிய குண்ட்த்தில் இறங்க முடியும்.
பொது குளியலறை என்பது தமிழ்நாட்டிற்கு புதிது. ஆம் ,பொது குளியலறை என்ற உடனே ஏதோ பஸ் நிலையத்தில் இருக்கும் முடை நாற்றமடிக்கும் பாத் ரூம்களை சொல்லவில்லை இது வேறு வகையான குளியல் அறைகள். பாத் ஹவுஸ் எனும் குளியல் இல்லங்கள் ஒரு சமூகத்தில் உச்சகட்ட நாகரீகத்தின் அடையாளங்கள். பண்டைய மொகஞ்சதாரோ , கிரீஸ் ஆகிய இடங்களில் மிக செழிப்பாக இக்கலாச்சாரம் பேனப்பட்டது.
என் உடைகளை கழற்றி காவி உடை அனிந்து பின் ஷவரில் நெடு நேரம் குளித்தேன். தண்ணீர் கொட்டிக்கொண்டிருந்தது. என் உடலில் எதையோ கழுவி அழிக்க முயற்சித்து பின் தோற்று ஓடியது நீர்.
சூரிய குண்டத்தில் மிக சொற்பமானவர்களே இருந்தனர். சுற்றிலும் செம்புத் தகடுகளை பதித்த தொட்டியில் 40 அடி உயரத்தில் கொட்டும் தண்ணீர் சூழலை மேலும் குளுமையாக்கியது. படிகளில் இறங்க இறங்க நீர் ஏறியது. நெஞ்சு வரை தன்னீரில் மூழ்கிய போது ஒர் விநாடி மின்சாரம் தாக்கி பின் குளிர்ந்து விரைத்து சூடேறியது உடல்.
குளத்தின் நடுவே 3 ரச லிங்கங்கள். ஒரு நடுத்தர வயது தடித்த ஆசாமி காதலியை தழுவது போல லிங்கத்தினை கட்டித் தழுவிக்கொண்டிருந்தார். அவருக்கு பின் அதே போல செய்ய மேலும் இருவர் காத்துக் கிடந்தனர். மெல்ல விலகி நீருக்குள் நடக்க முயற்சித்து மூழ்கி பின் பதறி எழுந்து நீர் கொட்டும் இட்த்திற்கு சென்றேன். உருட்டுக்கட்டையால் தாக்குவது போல நீர் முதுகில் அறைந்தது. முடிந்த வரை தாக்குபிடித்தபின் நகர்ந்து 3வது லிங்கத்தினை கட்டித் தழுவி படியேறினேன்.
குளத்திற்கு மேலே வெட்ட வெளியில் திரளான பொதுமக்கள் குறிப்பாக பெண்கள் இதையெல்லாம் பார்லிமெண்ட் மாடத்தில் இருந்து சபை நடவடிக்கைகளை பார்ப்பது போல பார்த்துக்கொண்டிருந்தனர்.
வளாகத்தின் மற்றொரு கோடியில் மலையேற்றத்திற்கு உதவுவதற்காக மூங்கில் கழிகள் விற்றுக்கொண்டிருந்தனர்.
தரையில் இறைந்து கடந்த மூங்கிலை ஏழெட்டுபேர் புதையலை தேடுவதுபோல கலைத்து கலைத்து எடுத்து கொண்டிருந்தனர். சட்டென ஒன்றை எடுத்தேன். தேடிக்கொண்டிருந்தவர்கள் நான் எடுத்த கழியினை ஒரு கண நேரத்தில் தாங்கள் எடுத்த கழியுடன் வாயு வேக மனோ வேகத்தில் பொருத்தி பார்த்துவிட்டு நிம்மதியடைந்து பின் மீண்டும் கோழி கிளறுவது போல கழியினை தேடிக்கொண்டிருந்தார்கள். எடுத்த குச்சி சற்று வளைந்திருந்த்து. மேற்கொண்டு தேட தோனவில்லை. தங்கவேல் சார் எனக்காக தேட தொடங்கினார். ஒரு நீண்ட குச்சியினை எடுத்துக் கொடுத்தார். தக்கன் நடத்திய யாகத்தில் கலந்து கொண்டவர்கள் இங்கே குச்சியாக கிடக்கின்றார்கள் என விளக்கினார். வெள்ளியங்கிரி மலைமேல் ஏறினால்தான் இவர்களுக்கு சாப விமோசனம் கிடைக்கும் என்றார் தங்கவேல் சார்.
மூங்கில் காய்ந்து வென்கல நிறத்தில் உறுதியாக இருந்தது. வாஞ்சையுடன் குச்சியினை தடவினேன். மலையேறி இறங்கும் வரை இதுவே வழித்துணை என்ற எண்ணமே குச்சியின் மேல் மரியாதை தோன்றியது. யதேச்சையாக கணுக்களை என்ணிப்பார்த்தேன். சரியாக 7 இருந்தது. மிதித்தும் வளைத்தும் கிளறியும் தட்டிப்பார்த்தும் கூட்டம் இன்னமும் குச்சியை தேடிக்கொண்டிருந்தது. பல்லாயிரம் ஆண்டு கடந்தாலும் தக்கன்யாகத்திற்கு சென்ற பலனை குச்சியாய் கிடந்த முனிபுங்கவர்கள் அனுபவத்துக்கொண்டிருந்தனர்.
3
-----------------------------------------------------------------------------------------------------------------------
இரவு 8.30 எவ்வளவு குறைவாக சாப்பிடமுடியுமோ அவ்வளவு குறைவாக சாப்பிட்டோம். குளிர்ந்த மழைக்காற்றுடன் அவ்வப்போது மின்னல் தோன்றிக்கொண்டிருந்த்து. இரவு மலையேறுவது ஏறக்குறைய சாத்தியமில்லை என தோன்றியது. காலை 4 மணிக்கு ஏறுவதாக முடிவாகியது. நானும் தங்கவேல் சார் எது நடந்தாலும் சரி இரவு எப்படியும் ஏறுவது என முன் முடிவோடு இருந்தோம். மேலும் மலை மேல் சூரிய உதயத்தினை காண்பது எங்கள் பயனத்தின் முக்கிய நோக்கமாக இருந்தது. எனவே எங்கள் பக்கம் ஆட்களை திரட்ட தொடங்கினோம்.
ஒரு வழியாக அனைவரும் இரவு ஏறிவிடலாம் என முடிவு செய்தனர் 9.30க்கு வண்டி கிளம்பி 10 மணிக்கு அடிவாரத்தினை அடைந்தோம். அடிவாரத்தில் வனத்துறையின் சோதனைசாவடியில் மலையேறும் அனைவரும் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டனர்.
கஞ்சா கடத்தும் கும்பலை சோதிப்பது போல எங்கள் பையை கொட்டி சோதித்தனர். ’ஒரு துண்டு பிளாஸ்டிக் கூட மேல போக்கூடாது சார்’ என சோதனை போடும் பையன் விளக்கினான்.
பிஸ்கட் பாக்கெட்டினை பிரித்து பிஸ்கட்டை பேப்பரில் போட்டலம் மடித்து கொடுத்தனர், போலோ மிட்டாய் கவர், குளுக்கோஸ் பாக்கெட், உலர் திராட்சை கவர், ஜவுளி கேரி பேக் என அனைத்தும் நிராயுத பாணியாக உறுவியெடுத்து குப்பையில் சேர்த்தார்கள். பிளாஸ்டிக்கால் ஆன பல்துலக்கும் பிரஷ் மற்றும் எனது பைபர் கிளாஸ் கண்ணாடி ஆகிய பிளாஸ்டிக் மட்டும் சற்று பெரிய மனது வைத்து விடுவித்தனர். ’தம்பி கொஞ்சம் பாத்து செய்யப்பா’ என கேட்டவரிடம் கேமராவில அதிகாரி பாத்துகிட்டிருக்கார் சார் என கூறினான்.
முன்கூட்டியே மலையேறும் போது எடுத்துசெல்லும் பை எவ்வளவுகளவு சிறியதாக இருகிறதோ அந்த அளவில் பயனம் சுகமாக இருக்கும் என்று கூறப்பட்டது. இருந்தும் எனது தோள் பையில் பின்வரும் பொருட்கள் இருந்த்து.
பழங்கள் 2 கிலோ, உலர் திராட்சை பிஸ்கட் 1 கிலோ, DSLRகாமிரா 3.5 கிலோ, லென்ஸ் 1 கிலோ, ஆடைகள் 1 கிலோ, பாதி மலையேறி பின் போட்டுக்கொள்வதற்காக செருப்பு 5 கிலோ, பிற சில்லரை சாமான்கள் சேர்த்தால் 15 கிலோ தேறும். குச்சி மற்றும் டார்ச் லைட் தனி.
உடன் வந்த பக்த கோடிகள் எனது பேக்கின் அளவைப் பார்த்து “சார் அங்கியே ரெண்டு நாள் தங்கிட்டு வாரீகளா “ என கேட்டு பீதி ஏற்படுத்தினர்.
முதல்படியில் சூடம் ஏற்றப்பட்டு சாமி கும்பிட்டு ஏற ஆரம்பித்தோம். சில்லென்ற குளிர் காற்று பக்த கோடிகளின் அரோகரா, கோயிலில் ஒலித்த பாடல் என கலவையான சூழலில் மேல் நோக்கி நடந்தோம்.
ஒரு கையில் குச்சி, மறு கையில் பாட்டரி லைட் முதுகில் தோள் பை. வித்தியாசமான கெட்டப். படிகள் ஏற ஏற குழு சிதறியது. இறுதியில் நானும் தங்கவேல் சார் மட்டும் ஓரிணையாக ஏறிக்கொண்டிருந்தோம்.
படிகள் ஆங்காங்கு பெயர்ந்து இருந்த்து, சில இடங்களில் கல் உருண்டு ஓடியது எச்சரிகையாக ஏறினோம். கால்களில் கல் குத்தியது. பிறகு பேக்கில் இருந்து செருப்பினை எடுத்து போட்டுக்கொண்டேன்.
ஒரு 2000 படி ஏறியிருப்போம், எனது கால்கள் இறுகிக் கொண்டது போல உணர்வு, தலையிலிருந்து வியர்வை கொட்டியது, பாம்பின் சீற்றம் போல மூச்சு, நா வறட்சி. அப்படியே உட்கார்ந்தேன் கால்கள் நடுங்க ஆரம்பித்தது. குளுக்கோஸை பிரித்து அப்படியே வாயில் கொட்டினேன்.
“சார் முத மலையில பாதி ஏறியிருப்பாமா?” என கேட்டேன்.
பரிதாபமாக பார்த்தார். “சார் முடியல, நீங்க வேனுமுனா போயிட்டு வாங்க, நா இப்டியே கிழே எறங்கிக்கிறேன்”
” ஒன்னும் இல்ல , கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க ,ஏறிடலாம்” என நம்பிக்கையூட்டினார்.
“ சார் இந்த செருப்புதான் பிரச்சனை, இத கழட்டி வைச்சிட்டு நடக்கிறேன்”
“அப்ப இத தூக்கீட்டு ஏறப்போறிங்களா, பேசாம இந்த மரத்துக்கு பின்னாடி வெச்சிருங்க, வரப்ப்ப எடுத்துகிலாம்” என்றார்
” சார் இது உட்லேண்ட்ஸ் செருப்பு மூவாயிரம் சார்” என பதறினேன். என்னையும் செருப்பையும் ஒரு மாதிரியாக பார்த்தார்.
‘ மகேஷ் நீங்க ஏறவேண்டியது ஒரு படி மட்டுமே. வேறெதையும் நினைக்காதீங்க. ஒரு படி. ஒவ்வொரு படி, மெல்ல ஏறுங்க” என உற்சாகப்படுத்தினார். எழுந்து தயாரானேன்.
வாலினி ஸ்பிரே கால் முழுவதும் அடித்துகொண்டேன். அதன் மனம் பரிச்சியமாக இருந்த்து. ஆகா! சில நாட்களுக்கு முன் ஆபிஸில் என்னை பார்க்க வந்தவரிடம் “உங்க பாடிஸ்பிரே பயங்கர நெடியுடன் வித்தியாமா இருக்கே, என்ன பிராண்ட் “ என கேட்டதும் அதற்கு அவர் நமுட்டு சிரிப்பு சிரித்த்தும் நினைவிற்கு வந்த்து. அட பாவி இந்த வாலினி ஸ்பிரேதான் அடிச்சிருந்தானா???
இனி எங்கும் உட்காரக்கூடாது என முடிவெடுத்தேன். ஆம் மலையேரும்போது சோர்வு தோன்றினால் சற்று நிற்கலாம். ஒருபோதும் உட்காரக்கூடாது. (எஞ்சின் ஓடிக்கிட்டே இருக்கனும். நின்னா சீஸ் ஆகிடும்)
மேலும் ஆயிரம் படிகள். கீழே கோவை நகரம் மின்னொளியில் மின்னியது. ஆம் அப்போதுதான் அதை உணர்ந்தேன். மலையில் எந்த இடத்தின் இருந்து பார்த்தாலும் தரை தெரிகிறது. அப்படியென்றால், மலை மிக செங்குத்தாக இருக்கிறது. ஒரு வேளை இது பகலாக இருந்தால் நமது பாதையின் இரு புறமும் அபாயமாக சரிந்து இறங்கும் பள்ளத்தாக்கை காணலாம் என்றார் தங்கவேல் சார். மேலும் நடந்தேன். இப்போது எனது கால்கள் நன்கு பழகிவிட்டது. ஆச்சரியம் சோர்வும் இல்லை. நடந்து கொண்டே இருந்தோம்.
” சார் முதல் மலையே இன்னும் முடியலயா?”, “ அவ்வளவு தான் பாதி தூரம் வந்து விட்டோம்”
“ என்னது பாதி தூரமா???” உலர் திராட்சையை கொத்தாக வாயில் போட்டு தண்ணீர் குடித்தேன். மீண்டும் நடந்தோம்.
ஒரு அரை மணி நேரத்திற்கு பிறகு பாதை மேலும் செங்குத்தாக மாறியது. தலைக்கு மேல் பாதை இருப்பதாக தோன்றியது.
கற்கள் அனேகமாக பெயர்ந்து இருந்த்து.கற்கள் பெயர்ந்த இடத்தில் குச்சியை ஊன்றி அழுத்தி பிறகு காலெடுத்து மெல்ல மெல்ல முன்னேறினோம். சில நேரங்களில் ஒரே கையில் குச்ச்சியினையும் பேட்டரி லைட்டையும் பிடித்துக் கொண்டு மற்றோரு கையை பாறையில் ஊண்றி செல்ல வேண்டியிருந்தது. சிறிது நேரம் கழித்து பேச்சு சத்தம் அதிகமானது. மேலும் ஏற ஏற விளக்கு வெளிச்சம் தெரிந்த்து.
முதல் மலை முடிவிற்கு வந்தது.
முதல் மலையில் சிறிய அளவிலான பிள்ளையார் கோவில் இருந்த்து. இதனை வெள்ளைப் பிள்ளையார் கோவில் என்கிறார்கள். காலத்தால் மிகவும் பிந்தியது. 6 மற்றும் 7 வது மலையில் வெள்ளை நிற சுண்ணாம்பு படிவ கற்கள் கிடைக்கின்றன. ஒருவேளை இக்கல்லை வைத்து இப்பிள்ளையார் உருவாக்கப்பட்டிருக்கலாம்.
கோவில் அருகே ஒரு வெட்ட வெளி மண்டபத்தில் பிரசவ வார்டில் இருப்பது போல 20 ஆண் சிங்கங்கள் ஆயாசமாக படுத்தும் உருண்டும் நெளிந்தும் கிடந்தன. ”என்னைப் போல் ஒருவன்” சாதரனமான டைட்டில் அல்ல என நினைத்துக்கொண்டேன்.
கோவிலை ஒட்டிய கடையில் விற்பனை சிறப்பாக இருந்த்து. சுக்கு காபி, வெள்ளரி, சர்பத், மிராண்டா வகைகள், வாழைப்பழம் என அனைத்தும் கிடைத்தது.
காலிப்பயல்கள் ஆங்காங்கு புகை விட்டுக்கொண்டிருந்தனர். நாங்கள் உட்காரவில்லை. ஏற்கனவே திட்டமிட்டபடி எங்கும் உட்காரக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தோம். சற்று நேரம் நின்றுகொண்டிருந்தோம். ‘ இனிமேல சிரம்மில்லை, 2வது மலை கொஞ்சம் ஈசியாகவே இருக்கும் என்றார் தங்கவேல் சார்.
வழி எங்க சார் என்றேன். அங்கே என்றார்.. பாதை இருண்டு கிடந்த்து. அமாவாசை இருட்டில் பால் வெளி மண்டலம் தலைக்கு நேர்மேலே வந்துகொண்டிருந்தது. காமிராவை எடுத்து பல்ப் டைம் செட் செய்து பால்வெளி மண்டலத்தினை போட்டோ எடுக்கலாமா என யோசித்தேன். கைகள் நடுங்கிகொண்டிருந்த்து. படம் நிச்சயம் நன்றாக வராது. தோள் பையை நன்கு இருக்கிக்கட்டி, தண்ணீர் குடித்து, திரும்பி புன்னகைத்து “போலாம் சார்” என்றேன். ஒரு முனிவர் போல “ஆம் அவ்வாறே ஆகுக” என்றார்.. இரண்டாவது மலையை நோக்கி நடக்கத் தொடங்கினோம்.
4
----------------------------------------------------------------------------------------------------------------------
இரண்டாவது மலை ஒரு திறந்த சமவெளிபகுதி போல நீண்டு சென்று கொண்டிருந்தது.
சிக்காடா எனும் சில்வண்டின் ரீங்காரம் அடர்த்தியாக கேட்டுக்கொண்டிருந்தது. மரங்களின் அடர்வு ஆங்காங்கே சற்று குறைந்திருந்தது.
வளைந்து திரும்பிய பாதையில் ஒரு பருத்த மரம் வேருடன் வீழ்ந்து கிடந்தது. ஒரு காம்பெளண்டு சுவரை தாண்டுவது போல மெல்ல ஏறி மரத்தினை தாண்டினோம். பாதை சரேலென கீழிரங்கி பின் மெதுவாக மேலேறிய ஒரு பெரிய பாறையின் அடியில் கொண்டுவிட்டது.
அதுதான் வழுக்குப்பாறை, பெயருக்கேற்றார்போல எவ்வித பிடிமானமின்றி உருட்டிவைத்த உருண்டையாக பாறை இருந்தது. நல்லவேளையாக படிகளை வெட்டிவைத்திருந்தனர். 1970க்கு முன்பு படிகள் இல்லை எனவே பாறை உச்சியிலிருந்து தொங்கும் கயிறு மற்றும் இரும்பு சங்கிலியினை பிடித்தபடி பக்த கோடிகள் ஏறுவார்களாம். பெயர்தான் வழுக்குப்பாறையே தவிர அது பாறையல்ல ஒரு குட்டி மலை. நடக்க நடக்க சென்று கொண்டே இருந்தது. ஒரு 20 நிமிட பயணத்திற்கு பிறகு மீண்டும் செங்குத்தாக மேல் நோக்கிய படிகள் முதல் மலையினை நினைவுபடுத்தியது. படிகள் படிகளாக இல்லாமல் கரடு முரடான கற்களை மேல் நோக்கி அடுக்கியதுபோல இருந்த்து. நெஞ்சுவரை கால் மடக்கி குச்சியை பள்ளத்தில் ஊண்றி கைபிடித்து மெல்ல ஏறிக்கொண்டிருந்தோம்.
சோர்வின் உச்சத்தில் இடுப்பில் கையூண்றி ஆயாசமாக டார்ச்சை மேல்நோக்கி அடித்து பாதையை பார்க்கும் வேளையில் தங்கவேல் சார் “ இன்னும் ஒரு படி மட்டுமே, அந்த எண்ணத்துடன் ஏறுங்கள்” என அசராமல் கூறுவார். ஒருமணி நேரபயணம், பாதை இன்னும் செங்குத்தாகவே ஏறியது. கூடுதலாக இருபுறமும் நல்ல அடர்ந்த மரங்கள்.
வெகு தூரத்திலிருந்து ஒரு தீனமான ஒலி விட்டு விட்டு வந்தது. பிறகு ஏற ஏற சப்தம் அதிகமாகிக்கொண்டே வந்தது. அடித்தொண்டையிலிருது விக்கல் எடுப்பது போலவும் பிளிறுவது போலவும் ஒலி, மிக சப்தமாக, வெகு அருகில். டார்ச்சை அனைத்து அப்படியே நின்றோம்.
துணைக்கு வேறு எவரேனும் கீழிருந்து வருகிறார்களா என காத்திருந்தோம். யாரும் வரவில்லை. அது பறவையின் ஒலியில்லை ஏனெனில் சப்தம் தரையிலிருந்தே வந்தது. நிச்சயமாக ஏதேனும் பாலுட்டியாக இருக்கலாம். நான் அது யானையாக இருக்கும் என அனுமானித்தேன். நல்லவேளையாக காற்று எங்களுக்கு எதிர் திசையில் இருந்து வந்தது. எனவே எந்த மிருகமாக இருந்தாலும் எங்களை கண்டுபிடிப்பது சிரமமே. பிறகு எந்த அளவில் வேகமாக செல்லமுடியுமோ அந்த அளவில் வேகமாகவும் ஓசைப்படாமலும் நடந்தோம். ஒலி கூடவே வருவது போல பிரமை.
மேலிருந்து விளக்கின் வெளிச்சம், சப்தமான தெளிவற்ற பேச்சு சப்தங்கள். டார்ச்சை அடித்தேன். ஒரு குடிசையும் அதன் அருகில் பாம்பாட்டி சுனை என்ற பலகையும் தென்பட்டது. வெற்றிகரமாக இரண்டாவது மலையினையும் கடந்து விட்டோம். கடையில் சுக்குகாபி சாப்பிட்டபடி “கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி பெரிய சத்தம் வந்ததே, யானையா?” என்றேன். கடையிலிருந்தவர் பதற்றமாக ’இல்லை மான்’ என்றார். நான் நம்பவில்லை என்பதை புரிந்து கொண்டார்.
ஆம் யானைகள் அதிகமாக உலாவும் இடம் வெள்ளியங்கிரி. பல வேளைகளில் கடைகளை எல்லாம் இடித்து தள்ளிவிடும். பாம்பாட்டி சுனையுக்கு சற்று மேலே 3வது மலைக்கு செல்லும் பாதை தென்பட்டது. அது பாதையல்ல. ஒரு சுவர். மெல்ல கடந்து மேலேறிய பிறகு, தங்கவேல் சார் இனிமே பிரச்சனை இல்லை என்றார். முழுபொய் என்றேன்.
5
----------------------------------------------------------------------------------------------------------------------
ஒரு பெருமழையில் பெயர்ந்த கற்கள் குவியலாக மாறி படியென அமைந்து மூன்றாவது மலை ஆரம்பித்தது. மரங்கள் அடர்ந்து பாதையின் இருபுறமும் சுவர்போல இருந்தது. வலிய வேங்கை மரங்கள் கூட்டம் கூட்டமாக நின்றிருந்தது. எங்க வீட்டு பிள்ளை எம் ஜி ஆர், நம்பியாரை அடித்தது போல வேங்கை மரத்தில் வரி வரியான தழும்புகள். ஆம் அங்குள மலைவாழ் மக்கள் அவற்றிலுருந்து பால் எடுப்பதற்காக பட்டையினை உரித்துவைத்துள்ளனர்.
நல்ல வேளை மலையேறும் பொது மக்களுக்கு தெரிந்தால் பட்டைக்கு பதிலாக மரத்தையே உரித்து எடுத்திருப்பார்கள். மரங்கள் அடர்ந்திருந்ததால் இருட்டு மேலும் கருமை அடைந்திருந்தது. இயந்திரம் போல கால்கள் மேலேறிக்கொண்டிருந்தது.
அரைமணி நேரம் நடந்தபிறகு கைதட்டி சுனையினை பார்த்தோம். சுனை நீர்தேங்கிய குட்டையாக இல்ல்லாமல் ஒரு ஊற்றுபோல இருந்த்து. அதில் ஒரு மூங்கில் குழாயினை கட்டி ஒரு பைப் போல மாற்றியிருந்தனர். சுனையில் கைதட்டினால் நீர் அதிகம் வரும் என்றார்கள் – உண்மையா என கண்டறிய முடியவில்லை. ஏறி வந்த களைப்பு தண்ணீரை ஒரு அரிய பொருளாக மாற்றி இருந்த்து. சுனையில் நீர் குடித்தோம், சுவை நாக்கில்பட்டு உடல் முழுவதும் பரவியது.
மூன்றாவது மலை சற்று சிறிய மலை. ஒரு நேர்குத்தான படிகளில் ஏறி ஒரு சமதளபரப்பை வந்தடைந்தோம்.
3வது மலை முடிவிற்கு வந்தது. அங்கும் கடை இருந்தது. கடையில் மோர் இருந்தது. மோரும் தயிரும் என்ன ஆனாலும் பிறர் வீடுகளிளோ, கடைகளிளோ சாப்பிடமாட்டேன். ஏனெனில் தயிர் தகைவதும் மோர் பெருக்குவதும் செய்வதற்கு எளிதாக இருந்தாலும் உண்மையில் எளிதான வேளை அல்ல. சமையலில் பழுத்த அனுபவம் வாய்ந்தவர்களால் மட்டுமே ஒரு நல்ல தயிரையும் மோரையும் உருவாக்க முடியும். நவீன யுகத்தில் தயிரை உடைந்து தண்ணீர் சேர்த்து நீர்த்தால் மோர் என்ற மடமையான செயல்பாடு உள்ளது.
கடையில் மோர் நன்றாக இருந்தது. மிகச்சரியான புளிப்பு, நுண்ணிய அளவில் லாக்டோஸின் இணிப்பு, அளவான நீர், பாலடையில்லா தெளிந்த கரைசல், அற்புதமான பி.ஹெச் – மனதார பாராட்டினேன். நேரம் இரண்டு மணி. கடைக்கு அருகிலேயே பலர் தூங்கிக்கொண்டிருந்தனர். குளிர் வாட்டியெடுத்தால் கால்களை குறுக்கி நெஞ்சொடு சேர்த்து போர்வையை மூடி ஏதோ ஒரு மூட்டை போல மனிதர்கள் மல்லாந்திருந்தனர்.
அதுக்குள்ளவே தூக்கமா என்று கடிகாரத்தை பார்த்தேன் மணி நள்ளிரவு 2 மணி. பகீரென்றது இவ்வளவு நேரமாகிவிட்டாதா?? காலைக்குள் போய் சேரமுடியுமா என்ற அச்சமும், இவ்வளவு நேரமாகியும் தூக்கத்தின் அறிகுறிகளோ களைப்பின் முகாந்திரமோ இல்லாது குறித்து ஆச்சிரியமும் அடைந்தேன். ஆனால் நினைத்தாலும் அவ்வளவு எளிதாக தூங்கமுடியாது என பிறகு புரிந்துகொண்டேன்.
ஒரு கணம் நடப்பதை நிறுத்தினாலும் குளிர் ஊசிபோல ஊடுருவி நடுங்கவைத்துவிடும். இத்தனைக்கும் மூன்றாவது மலை மணிபூரகத்தின் தன்மையான அக்னி அம்சம் நிறைந்தது என்பார்கள். கட்டுக்கதை என நினைத்துகொண்டேன். ஒருவேளை மேலே போக போக இதைவிட குளிராக இன்னும் இருக்குமோ??? இப்போது பாதை ஒரு ஒற்றையடி பாதை போலவும் இருபுறமும் புற்கள் நிறைந்தும் புற்களுக்கு கீழே டார்ச் அடிந்தாலும் விலாகாத இருளடர்ந்த பள்ளத்தாக்கும் உடன் வந்து கொண்டிருந்தது.
ஒரு நீண்ட நடைக்கு பிறகு மிகவும் விசாலமான புல்வெளிபிரதேசம் தென்பட்டது. ஆம் அதுவே 4ஆம் மலையின் துவக்கம். ஏற்ற இறக்கம் இல்லை ஒரே சமதளம். ஒருபுறம் அடர்ந்த காடு மறுபுறம் பள்ளத்தாக்கு. அடர்ந்த காடுகளுக்குள் என்ன இருக்கும். இந்த இருட்டில் போகும் மனிதர்களை பார்த்துகொண்டிருக்குமா? இருளில் காடு விழித்து வெறித்து பார்ப்பது போல இருந்தது. பதறி நடந்தேன். வளைந்தும் நெளிந்தும் ஒரு கரிய பாம்பு கிடப்பது போல பாதை நீண்டது.
ஒரு அரை மணி நேரத்திற்கு பிறகு 4ஆவதுமலை முடிவிற்கு வந்துவிட்டது. 5வது மலை சமதளமாக இல்லாமல் கீழிறங்கியது. அருவி கொட்டும் பாறையின் நுனியினை போல ஒரு அரைவட்ட பாறை விளிம்பில் பாதை முடிந்தது. கிடு கிடு பள்ளம். ஏழெட்டு டார்ச் ஒளிகள் ஸ்டார்வார்ஸ் சண்டைக்காட்சி போல குறுக்கே கலந்து பள்ளத்தின் ஆழத்தினை கணக்கெடுத்தது. ஒரு பெரிய கூட்டம் பள்ளத்தில் இறக்க பம்மிக்கொண்டிருந்தது. பின் மெதுவாக ஒவ்வொருவராக சர்வ ஜாக்கிரதையாக இறங்கிக்கொண்டிருந்தனர்.
கற்கள் பெயர்ந்தாலோ அல்லது கால் வழுக்கி விழுந்தாலோ என்ன ஆகும் என கற்பனை செய்யக்கூட முடியவில்லை. வெள்ளியங்கிரி ஆண்டவரை கூவிக்கொண்டே கூட்டம் தாண்டி சென்றது. பிறகு நின்றும் குனிந்தும் வளைந்தும் உட்கார்ந்தும் தாவியும் பாறையினை கட்டித் தழுவியும் ஒருவழியாக நாங்களும் கடந்தோம். சிறிது தூரம் சென்றதும் முன்பு பார்த்ததைவிட பெரிய பள்ளம்.
அட கடவுளே. திரும்பவும் அதே எச்சரிக்கையும் கூடுதல் அட்ரீனலினலும் கலந்து இறங்கினோம். அப்பா இந்த பள்ளம் மட்டுமே ஒரு மலை ஏறியதற்கு சமமாகும் என நினைத்துகொண்டேன். ஆனால் பிரச்சனை அவ்வளவு எளிதாக விடுவதாக இல்லை.
ஒரு நீண்ட சமதள பயனத்திற்கு பிறகு அதே போன்ற ஒரு பள்ளம். ஆனால் அவ்வளவு ஆழம் இல்லை. பள்ளத்தில் இறங்கி பழகிவிட்டதால். எளிதாக கடந்தோம். பிறகு லேசாக மலை கீழிறங்க ஆரம்பித்தது.
இதுவரை ஏறிய பழக்கப்பட்டிருந்த கால்கள் இறக்கத்தை பார்த்தவுடன் தறிகெட்டு இறங்க முயற்சித்து, விரைத்து பிடித்துகொண்டது. இறங்குவது அவ்வளவு எளிதானது அல்ல என தோன்றியது. சற்று தொலைவில் இருளில் ஒரு கரிய பூதம் போல ஒரு பெரும் பாறை உருளத்தயாராக இருந்தது. டார்ச் அடித்துப்பார்த்தோம்.
ஏறக்குறைய ஒரு பந்து ஆனால் எப்படி உருளாமல் இருக்கிறது என தெரியவில்லை. அது பீமன் தனது அஞ்ஞாத வாசத்தில் தின்று மிச்சம் வைத்த களியுரண்டையின் ஒரு பகுதி என்றார்கள்.
5வது மலையில் அங்காங்கே பெரும் பெரும் பள்ளங்கள் இருந்தது. பள்ளங்கள் எல்லாம் நல்ல வெண்மை நிறத்துடன் இருந்தது. 5ஆம் மலை சுண்னாம்பு பாறையால் ஆனது என தெரிந்தது. அந்த பள்ளம் எல்லாம் கரடி நோண்டியதோ, யானை தன் தந்தத்தால் பறித்ததோ இல்லை. எல்லாம் மனிதர்கள் செயல். சுண்ணாம்பு பாறையை நோண்டி திரு நீறு எடுத்திருக்கிறார்கள்.
சைவ மரபுப் படி மண்ணை திருநீராக அணியலாம் என்றாலும் சுண்ணாம்பை மணலை பூசமுடியுமா என தெரியவில்லை. எது எப்படியோ அந்த மண்ணின் ஒரு பிடி மலையின் அனுக்க மாதிரி என்பதால் நம்முடன் கொண்டு வரலாம். மரங்கள் அடர்ந்து வர ஆரம்பித்தது. வானத்தை கூட பார்க்கமுடியவில்லை.
வெகுதூரத்தில் பேச்சு சப்தங்கள். நீர் சலசலத்து ஓடும் ஒலி. பாதையில் நடுவில் வீழ்ந்து கிடந்த ஒரு பெரிய மரத்தை தாண்டியவுடன் மணிதர்கள் கூட்டமாக நின்று கொண்டிருந்தனர். சற்று தள்ளி தடாகம் போல் இல்லாமலும் வாய்க்கால் போல ஓடாமலும் ஒரு சுனையினை கண்டோம். அது புனிதத்தின் உச்சமாக கருதப்படும் ஆண்டி சுனை.
6
-----------------------------------------------------------------------------------------------------------------------
ஆண்டி சுனை, வெள்ளியங்கிரிக்கு ஒரு மினியேச்சர் மனசரோவர்.
ஒரு அறுபதடி நீளமுள்ள நீண்ட வாய்க்கால் போன்ற அமைப்பு. அதில் 20 அடிக்கு சிறிய நீர்த்தேக்கம் போல நீரைத் தேக்கி வைத்திருந்தார்கள். தேங்கி வழிந்த நீர் மேற்கு நோக்கி சென்று மறைகிறது.
நீரை தேக்கி வைத்துள்ள இடம் வெறும் 3 அடி ஆழமே உடையது. இரவு 3 மணியளவில் வாட்டும் குளிரில் சுனையினை வந்தடைந்தோம். கருமை படர்ந்த நீருக்குமேல் வெண்புகையென பனி படர்ந்திருந்தது. குளிக்க நினைத்து காலை விட்டவர்கள் நீரின் குளுமை கண்டு பீதியடைந்து தலையில் தெளித்து சென்றுகொண்டிருந்தனர். தங்கவேல் சார் காலையிலே குளித்துவிட்டதாக கூறினார்.
ஒரு கணமும் தாமதிக்காமல் ஆணவம் கண்மம் மாயை ஆகிய மும்மலத்துடன் உடைகளையும் கழற்றி நடுங்கும் உடலுடன் சுனையில் கால் நனைத்து அப்படியே நெடுஞ்சான்கிடையாக விழுந்தேன். சுனையின் அதீத குளுமை தீயைப் போல சுட்டது. நீருக்குள் மயிர்கால் விரைத்து அதன் வேர் வழியே வெப்பம் புகுந்து தோலை துளைத்து எலும்பின் மஜ்ஜை வரை ஊடறுத்துச் சென்றது. பத்து நொடிகள் அசைவற்று மூழ்கியிருந்து பின் எழுந்து மும்முறை நீர்புகுந்து மேலெலுந்தேன்.
உடைமாற்றி ஆரஞ்சு சுளையினை விழுங்கி குளுக்கோஸை கொட்டிக்கொண்டு மீண்டும் நடக்க ஆரம்பித்தோம். மலை மேலும் வேகமாக கீழிறங்க ஆரம்பித்தது. மிக நீண்டதொலைவில் வானத்தில் அவ்வப்போது நட்சத்திரங்கள் தோன்றி மறைந்தன. ஆனால் அது நட்சத்திரமாக இருப்பதற்கு வாய்பில்லை. ஏனெனில் பால்வெளி மண்டலம் வேறு ஒரு கோணத்தில் நீண்ட தொலைவில் ஒரு ஒளிப்பட்டையாக மிளிர்ந்து கொண்டிருந்தது. மீண்டும் வானத்தில் அவ்வப்போது வெளிச்சம். ஆச்சரியமாக கூவினேன்
“ சார் இது நம்ம மகரஜோதி செட்டப் மாதிரியே இருக்கே” என்றேன். இல்லை ஆட்கள் நடந்து கொண்டிருக்கிறார்கள் என்றார். வானத்திலா என்று கிண்டலாக கேட்டேன். இல்லை ஏழாவது மலையில் என்றார்.
திடுக்கிட்டு மீண்டும் பார்த்தேன், வெகு உயரத்தில் வெளிச்சங்கள் மின் மின் பூச்சிகள் போல மின்னியது. மீண்டும் நடை , கீழிறங்கிய மலை பின் சமதளமாக சென்றது. வலது புறத்தில் காடு அடர்ந்து வினோத ஒலியெலிப்பிக்கொண்டிருந்த்து. சற்று தள்ளி ஒரு கடை , இதுவே கடைசி கடை ,ஏழாவது மலையில் கடை ஏதும் இல்லை என்பதால் கூட்டமாக இருந்த்து. பக்த கோடிகள் காபியா டீயா என பகுத்தறிய இயலா நிலையில் உள்ள திரவ வஸ்துவை உறிஞ்சிக்கொண்டிருந்தனர். வெறும் 5 ரூபாய் முக மதிப்புடைய சுக்குகாபியை இருபது ரூபாய் சந்தைவிலை கொடுத்து பருகினோம்.
நீண்ட நடைக்கு பிறகு புவியமைப்பு மாறுவது தெரிந்த்து. மரங்கள் எண்ணிக்கை குறைந்துகொண்டே வந்தது. மண் சற்று பிசுபிசுத்து இருந்தது. கையிலெடுதுப் பார்த்தேன். களிமண் மற்றும் கொல்லுவியல் மண். இப்போது ஏழவது மலையில் உள்ளோம் என தெரிந்தது. பயணத்தின் இறுதியினை நெருங்கிவிட்டோம் என மகிழ்ந்தாலும், எதிரே தெரிந்த பாதை மற்றுமொரு பெரும் இடர் நிறை பயனத்திற்கு அறை கூவல் விடுப்பது போலிருந்தது.
பாதையற்ற பாதையாக மெல்லிய கோடாக அவ்வப்போது மறைந்தும் நெளிந்தும் பாதை வளர்ந்தது. தூரத்தில் தூசிபோல ஏதோ நெருங்கி வந்தது. அது மேக மூட்டம், அடர்பனியினை ஒரு போர்வை போல போர்த்தி சென்றது.
சட்டன மாறிய வானிலையில் 10 அடிக்கு அப்பால் என்னவென்று தெரியாத பயனத்தை மேற்கொண்டோம். டார்ச் அடித்து பாதையை பார்த்தால் ஒரு அடியிலேயே வெளிச்சம் சிதறி ஒரு கூம்பு போல அதன் ஒளித்தடம் மாறி அதில் பனித்துளிகள் ஒளிர்ந்த்து. வாட்சில் மணி தெரியவில்லை. அதற்குள்ளும் பனி படர்ந்திருந்த்து. கைச்சூட்டில் பனி விலக்கி மனி பார்த்தேன் மணி 3.30 பயனம் அசாத்தியமாக மாறிக்கொண்டிருந்த்து.
லார்ட் ஆப் தி ரிங்கஸ் கதையில் (படத்தில்) ப்ராடோவும் சாமும் மோதிரத்தினை அழிக்க மர்டோர் நோக்கி செல்லும் காட்சி நினைவிற்கு வந்தது. இப்போது பாறை அங்கங்கு தென்பட ஆரம்பித்தது. அவையெல்லம் உறுதியற்ற பாறைகள்.
ஒரு உருகும் ஐஸ்கிரீமில் உள்ள வால்நட்டை போல பாறைகள் அக்களிமண் மலையில் செருகிவைக்கப்பட்டது போல இருந்தது. முதல்நாள் பெய்த மழையின் ஈரம் மண்ணுள் இருந்தது. ஒரு திருப்பதில் தவறிகால்வைத்து உருண்ட கற்கள் சரிவில் சென்றுகொண்டே இருந்தது. மீளமுடியா பெரும்பள்ளத்தின் விளிம்பில் வெறும் குச்சியினையும் டார்ச் விளக்கை வைத்து மட்டுமே சென்றுகொண்டிருக்கிறோம் என உறைத்த்து.
குளிர் மேலே செல்ல செல்ல தீவிரமாகியது. எப்படியும் 12லிருந்து 13 செண்டிகிரேட் வரை இருக்கலாம். பனிபுகை ஒரு புயலென மேலிய சீழ்கை சப்த்ததுடன் அமானுஷ்யமாக அடித்துகொண்டிருந்த்து. வெகு நேரமாக ஒன்றை கவனிக்காமல் விட்டுவிட்டோம் அது எங்களைத் தவிர வேறு யாரும் அரைமணி நேரமாக தென்படவில்லை.
அப்படியென்றால் வழிமாறிவிட்டோமா. பாதையினை டார்ச் அடித்து கவனமாக ஆராய்ந்தேன். புதிதாக எவ்வித காலடித்தடமின்றி இருந்த்து. சிறு செடிகள் முனை மடியாமல் நிமிர்ந்து நின்றது. யாரும் செல்லாத வழியில் போவதாக தோன்றியது. தங்கவேல் சார் கலவரமடைந்து மெல்லிய குரலில் “இது சத்குரு குகைக்கு போற வழி அனேகமா இது மலைக்கு நேர்பின்னால் செல்லும்” என்றார். என்ன பிரச்சனை என்றேன்.
அது ஒரு மாபெரும் பள்த்தாக்கின் நுனியில் உள்ள குகை. இன்னும் சொல்லப்போனால் அவதார் படத்தில் வரும் தொங்கும் பாறை போன்றது. சற்று தவறினாலும் ஒரு கிலோமீட்டர் நேராக வீழ்வோம் என்றார். நிச்சயமாக திரும்பி போக முடியாது. என்ன செய்வதென தெரியாமல் பாறையில் உட்கார்ந்தோம்.
”நா அப்பவே சொல்லல! இதுக்குதான் பகலில் வரனும்” என சாத்தான் மனதில் கூவியது. ஒரே வழி. விவேக் பானியில் மெட்ராஸுக்கு மொத்தம் 6 நம்பர்தான் போனை போடு என்பது போல மலை சரியான கூம்பு வடிவத்தில் இருந்த்து. பாதை கூம்பை சுற்றி வட்ட வட்டமாக மேலேறுகிறது. நாம ஏன் நேர்குத்தாக ஏறக்கூடாது?? சரியான சவால் பின் நேர்மேலே கயிற்றில் ஏறுவது போல நீட்டிக்கொண்டிருக்கும் பாறையில் கால் வைத்து கை வைத்து கழி ஊண்றி கொட்டும் பனியில் மேலேறிகொண்டிருந்தோம்.
ஒரு ஐந்து நிமிடத்தில் பாதையினை பிடித்துவிட்டோம். மேலிருந்து ஒரு கூட்டம் கீழிறங்கியது. தேவலோகத்தில் இருந்து வருவது போல இருந்தது. இன்னும் எவ்வளவு தூரம் என்று கேட்டோம். அவர்கள் மையமாக பக்கம்தான் என்றார்கள். இப்போது அவர்கள் இன்னும் எவ்வளவு தூரம் கீழறங்கனும் என்றார்கள், இப்போது எங்கள் முறை “ கொஞ்சதூரம் தான் சீக்கிரம் இறங்கிறாலாம்” என்றோம். அரை மணி நேரத்திற்கொருமுறை இதே கேள்வியை இறங்குபவர்களிடம் கேட்பதுவும் அவர்களும் அதே பல்லவியினை பாடுவதும் நடந்தேறியது.
ஊதல் சப்த்த்துடன் பனிக்காற்று சுழற்றியடிக்க காலில் மென்மையான ஏதோ ஒன்று உரசி சென்றது. பனி மூட்டத்தில் என்னவென்று தெரியவில்லை. பிறகு 10 அடி தொலைவில் இருந்த பாறையில் அது கம்பீரமாக நின்று கொண்டிருந்த்து. அது ஒரு நாட்டு நாய்… ஆம் நாய்தான். ஆனால் இவ்வளவு தொலைவு மேலேறுவதை நினைத்து ஆச்சரியமாக இருந்த்து. நாய்க்கு பின்னால் ஒரு மனிதன் போகவும் அவனை பின் தொடர்ந்து நாயும் சென்றது.
”நாய் உங்களடோதா?” என்றேன். ”இல்ல என் பின்னாடியே வருது. எனக்கு வழிகாட்டிக்கொண்டே போவுது” என்றார். பிறகு இருவரும் மேலேறி நடந்து பனியில் மறைந்து போனார்கள். ”சார் நல்ல கவனிங்க இந்த 2 பேர்ல யாரோ ஒரு ஆள் சித்தர்” என்றேன் வேடிக்கையாக ”அனேகமா நாய்தான் ஒரிஜினல் சித்தராக இருக்கும்” என்றார் தங்கவேல் சார்
10 ஆண்டுகளுக்கு முன் கொல்லிமலை அரப்பள்ளி ஈஸ்வரன் கோவில் அருகே மாணிக்க சித்தர் என்றும் மாட்டு சித்தர் என்றறியப்படும் நபரின் பின் பத்து பதினைந்து தொழிலதிபர்கள்/ செல்வந்தர்கள் சட்டையின்றி கருத்து தடித்த உடலில் மயிரடர்ந்த மார்பில் கனத்த தங்கச்சங்கிலி அனிந்து போலியான பணிவுடன் சுற்றிக்கொண்டிருந்தது நினைவிற்கு வந்தது.
அவர்களுக்கு மட்டும் இந்த நாய் அகப்பட்டால் நாய் சித்தர் என பெயரிட்டு இதற்கு ஒரு கோயிலை கட்டுவார்கள்.
மேலும் மேலும் மேலேறி ஒரு சரிந்த மண்பரப்பினை அடைந்தோம். மீண்டும் இரு வழிகள். நேரக சென்றோம். “வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலுக்கு செல்லும் வழி” என ஒரு புத்தம் புது வழிகாட்டு பலகை தென்பட்டது.
வந்துவிட்டோமா?? அதற்குள்ளாகவா. நீண்ட தொலைவில் இருளில் மாபெரும் மாடு ஒன்று தன் முன்னங்கால்களை மடக்கி தன் தலையினை வான் நோக்கி பார்ப்பது போல ஒரு உருவம் தோன்றியது.
காட்சி மயக்கமா கற்பனையா எனத் தெரியவில்லை மாடு தன் தலையினை மெல்ல திருப்புவது போல தோன்றியது. அது மாடல்ல ஒரு மாபெரும் பாறை. எப்பகுதியிலுருந்து பார்த்தாலும் நந்தி போல தோற்றமளிக்கும் இயற்கையான பாறை.
ஆம் அது செதுக்கப்பட்டதல்ல. இயற்கையின் தீரா விளையாட்டில் ஒரு பகுதி போல பாறை இருந்தது. பாறைக்கு கீழே படிகள் தோன்றி ஆலயத்திற்கு சென்றது. அருமை நண்பர் தனசேகரன் தன் குழுவினருடன் நின்று கொண்டிருந்தார்.
ஒரு தூய புன்னகையும் குழந்தையின் சிரிப்புடனும் வரவேற்றார். பாறையில் செதுக்கப்பட்ட படிகள் ஆண்டவரின் சந்நிதானம் நோக்கி நீண்டது. படிகளின் வழியே இரு சாதுக்கள் முகம் நிறைந்த திருநீற்றுடன் என்னை வெறித்து நோக்கி கடந்து சென்றனர். மயிர் சிலிர்ப்படைந்து உடல் ஆடியது. மனதின் நீண்ட ஆழத்தில் எவரோ என்பெலாம் உருகும் அன்பர்தம் கூட்டத்தில் என்னையும் புணர்ப்பவன் கோவில் என்று அரற்றுவது கேட்டது. அது நான்தான் என்று பின்பு அறிந்தேன்.
கனவின் வெளியில் நின்று கொண்டிருக்கிறேன். காலம் பனிப்புகையென என்னை கடந்து சென்று கொண்டிருந்தது.
7
--------------------------------------------------------------------------------------------------------------------
மணி 5. இன்னும் விடியவில்லை.
நந்தி பாறையிலிருந்து கோவில் நோக்கி செல்லும் படிநெடுக கூட்டம் களைத்தும் சோர்ந்தும் நின்றிருந்தது.
கூட்டத்திற்கு அப்பால் வேல்களை வரிசையாக செருகி வைத்த வேலிக்குட்புறமாக கைகூப்பிய நிலையில் நின்று பக்த கோடிகள் கும்பிட்டுகொண்டிருந்தனர்.
6000 அடிக்கு உரித்தான குளிர் வாட்டிக்கொண்டிருந்தது. கூட்டம் குறையட்டும் என்று பாறையின் ஓரமாக அமர்ந்தேன். ”சாமி இங்க உக்காரதீங்க! ரத்தம் உறியற அட்டை நிறைய இருக்கும்” என்றபடி பூசாரிபோல் தோற்றமளித்த நபர் கடந்து சென்றார்.
உடன் உட்கார்ந்திருந்தவர்கள் பதறியப்டி எழுந்து உடைகளை உதறினார்கள். சலிப்படைந்து மேலும் அமைதியாக அமர்ந்தேன். அந்த சூழலில் ஹிர்டுனியா வாழ்வதற்கான வாய்ப்பே இல்லை. குறுகிய இடத்தில் கூட்டம் சேரவிடகூடாது என்ற முனைப்பில் கோவில் பூசாரிகள் எப்படியாவது ஆட்களை துரத்தி விடுவதற்காக இது போன்ற கதைகளை கட்டிவிடுகிறார்கள் என புரிந்து கொண்டேன். பொய்யர்களும் அயோக்கியர்களும் சர்வ வியாபி என்பது கண்கூடு.
ஏறக்குறைய 7 மணி நேரமாக சுமந்த பையை கழற்றி கீழேவைத்தேன். ஏதோ என் உடலை உதறி சர்வாத்மாகவும் சர்வ சுதந்திரமாகவும் இருப்பது போல இருந்தது. பின் நானும் தங்கவேல் சாரும் கூம்பிட்ட கரங்களுடன் சந்நிதானத்தின் முன் நின்றோம்.
பாறையின் உட்குழிவு குகை போன்று தோற்றம் காட்டி கோவில் அமைந்திருந்தது. மொத்தமாக ஒரு 20 சதுர அடி இருக்கலாம். குகையினுள் நிமிர்ந்து நிற்கமுடியாது. உட்காரும் அளவிற்கே அதன் உயரம் அமைந்திருந்த்து. குகையின் தரை முழுவதும் வில்வ இலைகளால் நிரம்பி இருந்த்து.
வில்வ இலைக் குவியலின் நடுவே மொட்டு மலர்வது போல 3 சிவலிங்கங்கள் அரும்பி இருந்தது. சுயம்பாக உருவான லிங்கம் என்பதால் ஆவுடையார் இல்லை. பிரம்ம பாகமும் விஷ்னு பாகமும் ஒரு வேளை பாறைக்குள் இருக்கலாம். ருத்ரபாகம் மட்டுமே வெளியில் தெரிகிறது.
இந்த 3 லிங்கங்கள் தவிர வெளியில் உள்ள இருபெரும் பாறைகளை லிங்கமாக கணக்கில் கொண்டால் மொத்தம் 5 லிங்கங்கள் அடங்கிய பஞ்ச லிங்க தலமாக வெள்ளியங்கிரியை கொள்ளலாம்.
முறைப்படி முதல் மரியாதை கனபதிக்கு என்பதால் கோவிலைக் கடந்து சற்று மேலேறி தோரணவாயில் கனபதியினை பார்க்க சென்றோம். கனபதி சிலை தற்காலத்தில் நிறுவப்பட்டதால், அவ்வளவாக என்னை ஈர்க்கவில்லை. ஆனால் அந்த இடம் அதிஅற்புதமான இயற்கை கட்டமைப்பில் இருந்த்து. ஒரு பெரும் பாறையினை கோடாலியால் பிளந்து பிரிந்து வைத்து அதன் இடைவெளியில் மாபெரும் தட்டையான கல்லால் ஒரு கூரை செய்தால் எப்படி இருக்கும் என கற்பனை செய்து பாருங்கள். ஆம் அப்படியே அமைந்திருந்த்து. அந்த பாறை இடைவெளியில் எப்படி ஒரு தட்டையான கல்லை மிகச்சரியான படுக்கை வசத்தில் இயற்கை வைத்துள்ளது என்பது ஆச்சரியமான ஒன்றே.
பிறகு மீண்டு கீழிறங்கி திருமூலட்டானத்தினை அடைந்தோம். பருத்த மனிதர் நெற்றி நிறைந்த விபூதியுடனும் காவிப்பல் சிரிப்புமாக அமர்ந்திருந்தார். பருத்த வயிறு சம்மனமிட்டு அமர்ந்த துடையின்மேல் உட்கார்ந்திருந்த்து. அந்த இடைவெளியில் நூலிலைபோன்ற அவரது கோவனம் மறைந்து போனதால் அவர் சம்மனமிட்டு அமர்ந்திருந்தாரா அல்லது அம்மனமிட்டு அமர்ந்திருந்தாரா என கண்டறிய இயலவில்லை.
அருகில் சென்ற உடன் கையள்ளி திருநீறெடுத்து புருவமத்தியினை அழுத்தி நெற்றி நிறைய பூசிவிட்டு வெள்ளந்தியாக சிரித்தார். பல்லாண்டுகளுக்கு முன் முதன்முறையாக சிதம்பரம் கோவிலில் கேட்ட என்று வந்தாய் என்ற தேவரப்பாடல் மின்னி மறைந்தது.
நான் சிவனருட் செல்வனில்லை, என்பெலாம் உருகும் அன்பர்தம் கூட்டத்தில் என்னையும் புணர்பவன் என்று பொய்யுரைக்கவும் துணிபவன் அல்ல இருந்தும் ஏதோ ஒரு மாயவலையில் வீழ்ந்து மையம் நோக்கி செல்லும் இரைபோல அங்கிருந்தேன். பின் மும்முறை தொழுது பின்னகர்ந்து பெருமூச்சுடன் சற்று கீழிரங்கி உட்கார்ந்தேன்.
நண்பர்கள் தனசேகரனும், கருப்பண்ணனும் வேல் வேலிக்குள் நின்று பூசை பார்க்கப்போவதாக கூறினார்கள். வேகமாக புலரும் காலை நேரத்தினை படமெடுப்பதற்காக நந்தி பாறைக்கு அருகில் சென்றேன். இருளில் கருத்த மலைகளின் விளிம்பின் வெளிச்சம் மெலிதாக படர்ந்து பின் வீறு கொண்டெழுந்து செங்கொழுந்தினைப் போல் சுடர்விட்டுக்கொண்டிருந்தது. கனத்திற்கு கனம் நிறங்கள் மாறிக்கொண்டே இருந்தது. நீலத்தில் இத்தனை வகைகளா? நீல நிறமும் காலை தென்றலும் நெஞ்சு நிறைந்த அமைதியினையும் நிறைவையும் அளித்த்து.
மேகங்கள் மலையினை மறைப்பதும் பின் மறைவதுமாக விளையாட்டுக்காட்டிக்கொண்டிருந்தது. மீண்டும் ஒருமுறை மூலட்டானம் சென்று சாமிகும்பிட தங்கவேல் சார் அழைத்தார். எனக்கு ஏனோ விருப்பமில்லை. கேமராவை அவரிடம் கொடுத்து இங்கேயே உட்கார்ந்திருப்பதாக தெரிவித்தேன்.
பாறையின் சுவரில் சரிந்து உட்கார்ந்து முதுகுப்பையினை இறக்கிவைத்தேன். பை ஒரு உயிருள்ள செல்லபிராணி போலவும் என் பொருட்டு அதுவும் என்னுடன் இருப்பதாகவும் தோன்றியது. என் கண்ணாடி, கடிகாரம் யாவும் ஜடப்பொருட்கள் என்பது மறைந்து உயிர் நிரம்பிய துணையாக தோற்றமளித்தது. ஒரு ஆழ்ந்த தன்னிரக்கம் தோன்றி உடல் தளர்வடைந்து தாங்க இயலா துயரம் பீடித்துகொண்டது. சே!! என்ன இது. பைத்தியம்தான் பிடித்துவிட்டதா என தலையினை உதறி தண்ணீர் குடித்தேன்.
தூரத்தில் ஆட்கள் இன்னமும் மேலேறிகொண்டிருந்தனர். இளைஞர்கள் கூட்டம் கூட்டமாக செல்போனில் படமெடுத்துகொண்டிருந்தனர். காலருகே ஒரு சிறு குருவி புல்லைக் கொத்திக்கொண்டிருந்தது.
மாட்ரிக்ஸில் நியோ கேட்கும் புராதானமாக மனித குலம் ஆரம்பம் தொட்டு வினவும் கேள்வியான “What is the purpose of Life” மனதில் எதிரொலித்துகொண்டிருந்தது.
தூரத்தில் தங்கவேல் சார் வந்துகொண்டிருந்தார். பின் இருவரும் பழங்கள் சாப்பிட்டு புகைப்படங்கள் எடுத்தோம்.
காலை மணி 7.00 புறப்படும் வேளை நெருங்கியது. காலடியில் மேகங்கள் தழுவிச்சென்றன. நீண்ட பெருமூச்சில் வீடு நோக்கிய பயணம் தொடங்கியது. இரவில் பார்த்த இடங்கள் வெளிச்சத்தில் வேறொன்றாக தெரிந்த்து.
பெரும் பள்ளத்தாக்கும் வழுக்கும் பாறைகளும் நாம்தான இரவில் இதை கடந்தது என வியக்க வைத்தது. இரவின் அதீத குளிரில் குளித்த ஆண்டி சுனை தெளிந்த ஓடையாக ஓடிக்கொண்டிருந்தது.
நடந்துகொண்டே இருந்தோம். ஓவ்வோரு மலையாக இறங்கினோம். நேரம் செல்ல செல்ல கால்கள் நடுங்க ஆரம்பித்தது. ஓடும் கால்களை சிரமப்பட்டும் பிடித்து நிறுத்தி மெல்ல பக்கவாட்டில் சற்று சாய்ந்து வலியின் முனகலில் படிப்படியாக கீழிறங்கினோம்.
முதல் மலையின் முழங்கால் உடைக்கும் படிக்கட்டுகளில் கால்கள் முற்றிலுமாக செயலிலந்து போல தோன்றியது. அடிவாரத்தில் இருந்து ரேடியோ சத்தம் தெளிவற்று கேட்கத் துவங்கியது. தாங்க இயலா வலியில் கால் துடிக்க அப்படியே கீழே விழுந்து அமர்ந்தேன்.
அடிவாரத்தின் கோவில் கண்ணுக்கு தெரிந்தது. வெகு தொலைவில் தங்கவேல் சார் சென்று கொண்டிருந்தார். சக்தியெல்லாம் திரட்டி படிகளை கடந்து முதல் படியின் அருகில் உள்ள கோவிலில் நட்ட கம்பத்தினை பிடித்து தடுமாறி நின்றபோது, வீபூதி தட்டுடன் பூசாரி “ சாமி விழுந்திராதீங்க! பத்திரமா போங்க!!” என்றார் தாயின் மடியில் இருந்து இறக்கிவிடப்பட்ட கைக்குழந்தை போல நின்று கொண்டிருந்தேன். மலை வெயிலில் பளபளத்துகொண்டிருந்தது. கால்களின் முன்னால் வீட்டிற்கு செல்லும் பாதை.
‘ அவங்கெல்லாம் எங்க சார் ஏறுவாங்க’ ,என்றேன்.
சுப்ரமணியம் சார் தனது ஒரு மண்டல சாதனையான கருந்தாடியினை நீவிவிட்டு மென்மையாக சிரித்தார். எனக்கு பாத்ரூம் போக வேண்டுமென
தோன்றியது.














2 -------------------------------------------------------------------------------------------------------------------------
பிறகு 3 மணிக்கு நண்பர் தனசேகரன் வந்தார். ஒரளவு கூட்டம் கூடியதும், வெகு நேரமாக வெயிலில் நிற்கும் வண்டியில் பையை வைக்கலாம் என்று எண்ணி பிறகு வண்டி கிளம்பும் போது செல்லலாம் என விட்டுவிட்டேன்.
சரியாக 3.30 மணிக்கு கிளம்பலாம் என்றார்கள்.
ஈஷாவின் மேலுல்ல நம்பிக்கையால் சீட் போடவில்லை விளைவு கடைசி சீட்டில் கடைசி இடம் கிடைத்து.
நான் செண்டரில் உட்கார்ந்திருந்த நேரத்தில் கிடைத்த பொருளை வைத்து நண்பர்கள் சீட் பிடித்திருந்தனர்.
எனக்கு நமது பண்பாடு மற்றும் கலச்சாரத்தின் மேலுல்ல நம்பிக்கை மேலும் திடமானது. வண்டி உறுமியது, பல்லை பிடுங்குவது போல ஆக்ஸிலேட்டரை ட்ரைவர் பதம்பார்த்து கொண்டிருந்தார்.
சுப்ரமணியம் சார் பதறினார், “ வண்டிய நிறுத்தப்பா, இண்ணும் 2 ஆள் வரனும்” என்றார்
”எங்க சார் போய்டாங்க, போன போடுங்க’ என்றார் ஒருவர்.
ஒரு அரை மணி நேர போராட்டத்திற்கு பிறகு வாட்ட சாட்டமான இரு இளைஞர்கள் வந்து சேர்ந்தனர்.
என் பக்கத்தில் உட்கார்ந்திருந்த நண்பர் கருப்பண்ணனிடம் ஐபோனை நோண்டியபடி “அப்படி ஒன்னும் லேட்டாகல” என்றார்கள்.
கண்ணை மூடி தூங்க முயற்சித்தேன்.
பரமத்தியில் தங்கவேல் சார் மேலும் இருவரை கூட்டிக்கொண்டு ஏறினார். அவர் முன் சீட்டில் உட்கார்ந்துகொள்ள நான் மீண்டும் தூங்க முயற்சித்தேன்.
பலவித குழப்பமான கனவுகள், வண்டி அசுர வேகத்தில் போவதாக தோன்றியது. கண் திறந்து பார்த்தால் அப்போதுதான் வேலாயுதம்பாளையத்தினை வண்டி தாண்டியது.
வண்டி கோவை தாண்டும் போது மேகம் இருட்டிக்கொண்டு மின்னலை இறக்கிக்கொண்டிருந்தது. சற்று நேரத்தில் தூறல் பெரிதாகி மழை கண்ணாடி சன்னலில் மோதி வழிந்தது. “ மழை பெய்தால் ஏறமுடியாது. அடிவாரத்துடன் திரும்பவேண்டியதுதான் “ என்றார்கள். மேலும் பாதி மலை ஏறி மழையில் மாட்டிகொண்டவர்கள் 2 நாட்கள் அப்படியே அசையாமல் இருந்து பின் மீண்டு வந்தததையும் தெரிவித்தனர். ஒரு 20 கி.மீ தாண்டியபின் மழை இல்லை ஆனால் பின்னால் துறத்திக்கொண்டு வருவது போல குளிர்காற்று வீசியது.
பேரூர் தாண்டி ஒரு பேக்கரியில் பிரட்பாக்கெட்டுகள் வாங்கப்பட்டது. எதற்கு என்றேன். நாளைக்கு சாப்பிட என்றனர். ஒரு வழியாக 7 மணிக்கு வண்டி ஈஷா மையத்தினை அடைந்தது.
எப்போது சென்றாலும் புதிய கட்டமைப்பில் இருப்பது ஈஷாவின் சிறப்பு. 4 ஆண்டுகளுக்கு பிறகு வருகிறேன் ,நிறைய மாற்றங்கள்.
தங்கவேல் சார் தீர்த்த குண்டத்தில் குளிப்பதற்கான சீட்டுகளை வாங்கி வந்தார். முதலில் ஒரு பொது குளியறையில் குளித்த பின்புதான் சிறிய குளம் போன்ற சூரிய குண்ட்த்தில் இறங்க முடியும்.
பொது குளியலறை என்பது தமிழ்நாட்டிற்கு புதிது. ஆம் ,பொது குளியலறை என்ற உடனே ஏதோ பஸ் நிலையத்தில் இருக்கும் முடை நாற்றமடிக்கும் பாத் ரூம்களை சொல்லவில்லை இது வேறு வகையான குளியல் அறைகள். பாத் ஹவுஸ் எனும் குளியல் இல்லங்கள் ஒரு சமூகத்தில் உச்சகட்ட நாகரீகத்தின் அடையாளங்கள். பண்டைய மொகஞ்சதாரோ , கிரீஸ் ஆகிய இடங்களில் மிக செழிப்பாக இக்கலாச்சாரம் பேனப்பட்டது.
என் உடைகளை கழற்றி காவி உடை அனிந்து பின் ஷவரில் நெடு நேரம் குளித்தேன். தண்ணீர் கொட்டிக்கொண்டிருந்தது. என் உடலில் எதையோ கழுவி அழிக்க முயற்சித்து பின் தோற்று ஓடியது நீர்.
சூரிய குண்டத்தில் மிக சொற்பமானவர்களே இருந்தனர். சுற்றிலும் செம்புத் தகடுகளை பதித்த தொட்டியில் 40 அடி உயரத்தில் கொட்டும் தண்ணீர் சூழலை மேலும் குளுமையாக்கியது. படிகளில் இறங்க இறங்க நீர் ஏறியது. நெஞ்சு வரை தன்னீரில் மூழ்கிய போது ஒர் விநாடி மின்சாரம் தாக்கி பின் குளிர்ந்து விரைத்து சூடேறியது உடல்.
குளத்தின் நடுவே 3 ரச லிங்கங்கள். ஒரு நடுத்தர வயது தடித்த ஆசாமி காதலியை தழுவது போல லிங்கத்தினை கட்டித் தழுவிக்கொண்டிருந்தார். அவருக்கு பின் அதே போல செய்ய மேலும் இருவர் காத்துக் கிடந்தனர். மெல்ல விலகி நீருக்குள் நடக்க முயற்சித்து மூழ்கி பின் பதறி எழுந்து நீர் கொட்டும் இட்த்திற்கு சென்றேன். உருட்டுக்கட்டையால் தாக்குவது போல நீர் முதுகில் அறைந்தது. முடிந்த வரை தாக்குபிடித்தபின் நகர்ந்து 3வது லிங்கத்தினை கட்டித் தழுவி படியேறினேன்.
குளத்திற்கு மேலே வெட்ட வெளியில் திரளான பொதுமக்கள் குறிப்பாக பெண்கள் இதையெல்லாம் பார்லிமெண்ட் மாடத்தில் இருந்து சபை நடவடிக்கைகளை பார்ப்பது போல பார்த்துக்கொண்டிருந்தனர்.
வளாகத்தின் மற்றொரு கோடியில் மலையேற்றத்திற்கு உதவுவதற்காக மூங்கில் கழிகள் விற்றுக்கொண்டிருந்தனர்.
தரையில் இறைந்து கடந்த மூங்கிலை ஏழெட்டுபேர் புதையலை தேடுவதுபோல கலைத்து கலைத்து எடுத்து கொண்டிருந்தனர். சட்டென ஒன்றை எடுத்தேன். தேடிக்கொண்டிருந்தவர்கள் நான் எடுத்த கழியினை ஒரு கண நேரத்தில் தாங்கள் எடுத்த கழியுடன் வாயு வேக மனோ வேகத்தில் பொருத்தி பார்த்துவிட்டு நிம்மதியடைந்து பின் மீண்டும் கோழி கிளறுவது போல கழியினை தேடிக்கொண்டிருந்தார்கள். எடுத்த குச்சி சற்று வளைந்திருந்த்து. மேற்கொண்டு தேட தோனவில்லை. தங்கவேல் சார் எனக்காக தேட தொடங்கினார். ஒரு நீண்ட குச்சியினை எடுத்துக் கொடுத்தார். தக்கன் நடத்திய யாகத்தில் கலந்து கொண்டவர்கள் இங்கே குச்சியாக கிடக்கின்றார்கள் என விளக்கினார். வெள்ளியங்கிரி மலைமேல் ஏறினால்தான் இவர்களுக்கு சாப விமோசனம் கிடைக்கும் என்றார் தங்கவேல் சார்.
மூங்கில் காய்ந்து வென்கல நிறத்தில் உறுதியாக இருந்தது. வாஞ்சையுடன் குச்சியினை தடவினேன். மலையேறி இறங்கும் வரை இதுவே வழித்துணை என்ற எண்ணமே குச்சியின் மேல் மரியாதை தோன்றியது. யதேச்சையாக கணுக்களை என்ணிப்பார்த்தேன். சரியாக 7 இருந்தது. மிதித்தும் வளைத்தும் கிளறியும் தட்டிப்பார்த்தும் கூட்டம் இன்னமும் குச்சியை தேடிக்கொண்டிருந்தது. பல்லாயிரம் ஆண்டு கடந்தாலும் தக்கன்யாகத்திற்கு சென்ற பலனை குச்சியாய் கிடந்த முனிபுங்கவர்கள் அனுபவத்துக்கொண்டிருந்தனர்.
3
-----------------------------------------------------------------------------------------------------------------------
இரவு 8.30 எவ்வளவு குறைவாக சாப்பிடமுடியுமோ அவ்வளவு குறைவாக சாப்பிட்டோம். குளிர்ந்த மழைக்காற்றுடன் அவ்வப்போது மின்னல் தோன்றிக்கொண்டிருந்த்து. இரவு மலையேறுவது ஏறக்குறைய சாத்தியமில்லை என தோன்றியது. காலை 4 மணிக்கு ஏறுவதாக முடிவாகியது. நானும் தங்கவேல் சார் எது நடந்தாலும் சரி இரவு எப்படியும் ஏறுவது என முன் முடிவோடு இருந்தோம். மேலும் மலை மேல் சூரிய உதயத்தினை காண்பது எங்கள் பயனத்தின் முக்கிய நோக்கமாக இருந்தது. எனவே எங்கள் பக்கம் ஆட்களை திரட்ட தொடங்கினோம்.
ஒரு வழியாக அனைவரும் இரவு ஏறிவிடலாம் என முடிவு செய்தனர் 9.30க்கு வண்டி கிளம்பி 10 மணிக்கு அடிவாரத்தினை அடைந்தோம். அடிவாரத்தில் வனத்துறையின் சோதனைசாவடியில் மலையேறும் அனைவரும் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டனர்.
கஞ்சா கடத்தும் கும்பலை சோதிப்பது போல எங்கள் பையை கொட்டி சோதித்தனர். ’ஒரு துண்டு பிளாஸ்டிக் கூட மேல போக்கூடாது சார்’ என சோதனை போடும் பையன் விளக்கினான்.
பிஸ்கட் பாக்கெட்டினை பிரித்து பிஸ்கட்டை பேப்பரில் போட்டலம் மடித்து கொடுத்தனர், போலோ மிட்டாய் கவர், குளுக்கோஸ் பாக்கெட், உலர் திராட்சை கவர், ஜவுளி கேரி பேக் என அனைத்தும் நிராயுத பாணியாக உறுவியெடுத்து குப்பையில் சேர்த்தார்கள். பிளாஸ்டிக்கால் ஆன பல்துலக்கும் பிரஷ் மற்றும் எனது பைபர் கிளாஸ் கண்ணாடி ஆகிய பிளாஸ்டிக் மட்டும் சற்று பெரிய மனது வைத்து விடுவித்தனர். ’தம்பி கொஞ்சம் பாத்து செய்யப்பா’ என கேட்டவரிடம் கேமராவில அதிகாரி பாத்துகிட்டிருக்கார் சார் என கூறினான்.
முன்கூட்டியே மலையேறும் போது எடுத்துசெல்லும் பை எவ்வளவுகளவு சிறியதாக இருகிறதோ அந்த அளவில் பயனம் சுகமாக இருக்கும் என்று கூறப்பட்டது. இருந்தும் எனது தோள் பையில் பின்வரும் பொருட்கள் இருந்த்து.
பழங்கள் 2 கிலோ, உலர் திராட்சை பிஸ்கட் 1 கிலோ, DSLRகாமிரா 3.5 கிலோ, லென்ஸ் 1 கிலோ, ஆடைகள் 1 கிலோ, பாதி மலையேறி பின் போட்டுக்கொள்வதற்காக செருப்பு 5 கிலோ, பிற சில்லரை சாமான்கள் சேர்த்தால் 15 கிலோ தேறும். குச்சி மற்றும் டார்ச் லைட் தனி.
உடன் வந்த பக்த கோடிகள் எனது பேக்கின் அளவைப் பார்த்து “சார் அங்கியே ரெண்டு நாள் தங்கிட்டு வாரீகளா “ என கேட்டு பீதி ஏற்படுத்தினர்.
முதல்படியில் சூடம் ஏற்றப்பட்டு சாமி கும்பிட்டு ஏற ஆரம்பித்தோம். சில்லென்ற குளிர் காற்று பக்த கோடிகளின் அரோகரா, கோயிலில் ஒலித்த பாடல் என கலவையான சூழலில் மேல் நோக்கி நடந்தோம்.
ஒரு கையில் குச்சி, மறு கையில் பாட்டரி லைட் முதுகில் தோள் பை. வித்தியாசமான கெட்டப். படிகள் ஏற ஏற குழு சிதறியது. இறுதியில் நானும் தங்கவேல் சார் மட்டும் ஓரிணையாக ஏறிக்கொண்டிருந்தோம்.
படிகள் ஆங்காங்கு பெயர்ந்து இருந்த்து, சில இடங்களில் கல் உருண்டு ஓடியது எச்சரிகையாக ஏறினோம். கால்களில் கல் குத்தியது. பிறகு பேக்கில் இருந்து செருப்பினை எடுத்து போட்டுக்கொண்டேன்.
ஒரு 2000 படி ஏறியிருப்போம், எனது கால்கள் இறுகிக் கொண்டது போல உணர்வு, தலையிலிருந்து வியர்வை கொட்டியது, பாம்பின் சீற்றம் போல மூச்சு, நா வறட்சி. அப்படியே உட்கார்ந்தேன் கால்கள் நடுங்க ஆரம்பித்தது. குளுக்கோஸை பிரித்து அப்படியே வாயில் கொட்டினேன்.
“சார் முத மலையில பாதி ஏறியிருப்பாமா?” என கேட்டேன்.
பரிதாபமாக பார்த்தார். “சார் முடியல, நீங்க வேனுமுனா போயிட்டு வாங்க, நா இப்டியே கிழே எறங்கிக்கிறேன்”
” ஒன்னும் இல்ல , கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க ,ஏறிடலாம்” என நம்பிக்கையூட்டினார்.
“ சார் இந்த செருப்புதான் பிரச்சனை, இத கழட்டி வைச்சிட்டு நடக்கிறேன்”
“அப்ப இத தூக்கீட்டு ஏறப்போறிங்களா, பேசாம இந்த மரத்துக்கு பின்னாடி வெச்சிருங்க, வரப்ப்ப எடுத்துகிலாம்” என்றார்
” சார் இது உட்லேண்ட்ஸ் செருப்பு மூவாயிரம் சார்” என பதறினேன். என்னையும் செருப்பையும் ஒரு மாதிரியாக பார்த்தார்.
‘ மகேஷ் நீங்க ஏறவேண்டியது ஒரு படி மட்டுமே. வேறெதையும் நினைக்காதீங்க. ஒரு படி. ஒவ்வொரு படி, மெல்ல ஏறுங்க” என உற்சாகப்படுத்தினார். எழுந்து தயாரானேன்.
வாலினி ஸ்பிரே கால் முழுவதும் அடித்துகொண்டேன். அதன் மனம் பரிச்சியமாக இருந்த்து. ஆகா! சில நாட்களுக்கு முன் ஆபிஸில் என்னை பார்க்க வந்தவரிடம் “உங்க பாடிஸ்பிரே பயங்கர நெடியுடன் வித்தியாமா இருக்கே, என்ன பிராண்ட் “ என கேட்டதும் அதற்கு அவர் நமுட்டு சிரிப்பு சிரித்த்தும் நினைவிற்கு வந்த்து. அட பாவி இந்த வாலினி ஸ்பிரேதான் அடிச்சிருந்தானா???
இனி எங்கும் உட்காரக்கூடாது என முடிவெடுத்தேன். ஆம் மலையேரும்போது சோர்வு தோன்றினால் சற்று நிற்கலாம். ஒருபோதும் உட்காரக்கூடாது. (எஞ்சின் ஓடிக்கிட்டே இருக்கனும். நின்னா சீஸ் ஆகிடும்)
மேலும் ஆயிரம் படிகள். கீழே கோவை நகரம் மின்னொளியில் மின்னியது. ஆம் அப்போதுதான் அதை உணர்ந்தேன். மலையில் எந்த இடத்தின் இருந்து பார்த்தாலும் தரை தெரிகிறது. அப்படியென்றால், மலை மிக செங்குத்தாக இருக்கிறது. ஒரு வேளை இது பகலாக இருந்தால் நமது பாதையின் இரு புறமும் அபாயமாக சரிந்து இறங்கும் பள்ளத்தாக்கை காணலாம் என்றார் தங்கவேல் சார். மேலும் நடந்தேன். இப்போது எனது கால்கள் நன்கு பழகிவிட்டது. ஆச்சரியம் சோர்வும் இல்லை. நடந்து கொண்டே இருந்தோம்.
” சார் முதல் மலையே இன்னும் முடியலயா?”, “ அவ்வளவு தான் பாதி தூரம் வந்து விட்டோம்”
“ என்னது பாதி தூரமா???” உலர் திராட்சையை கொத்தாக வாயில் போட்டு தண்ணீர் குடித்தேன். மீண்டும் நடந்தோம்.
ஒரு அரை மணி நேரத்திற்கு பிறகு பாதை மேலும் செங்குத்தாக மாறியது. தலைக்கு மேல் பாதை இருப்பதாக தோன்றியது.
கற்கள் அனேகமாக பெயர்ந்து இருந்த்து.கற்கள் பெயர்ந்த இடத்தில் குச்சியை ஊன்றி அழுத்தி பிறகு காலெடுத்து மெல்ல மெல்ல முன்னேறினோம். சில நேரங்களில் ஒரே கையில் குச்ச்சியினையும் பேட்டரி லைட்டையும் பிடித்துக் கொண்டு மற்றோரு கையை பாறையில் ஊண்றி செல்ல வேண்டியிருந்தது. சிறிது நேரம் கழித்து பேச்சு சத்தம் அதிகமானது. மேலும் ஏற ஏற விளக்கு வெளிச்சம் தெரிந்த்து.
முதல் மலை முடிவிற்கு வந்தது.
முதல் மலையில் சிறிய அளவிலான பிள்ளையார் கோவில் இருந்த்து. இதனை வெள்ளைப் பிள்ளையார் கோவில் என்கிறார்கள். காலத்தால் மிகவும் பிந்தியது. 6 மற்றும் 7 வது மலையில் வெள்ளை நிற சுண்ணாம்பு படிவ கற்கள் கிடைக்கின்றன. ஒருவேளை இக்கல்லை வைத்து இப்பிள்ளையார் உருவாக்கப்பட்டிருக்கலாம்.
கோவில் அருகே ஒரு வெட்ட வெளி மண்டபத்தில் பிரசவ வார்டில் இருப்பது போல 20 ஆண் சிங்கங்கள் ஆயாசமாக படுத்தும் உருண்டும் நெளிந்தும் கிடந்தன. ”என்னைப் போல் ஒருவன்” சாதரனமான டைட்டில் அல்ல என நினைத்துக்கொண்டேன்.
கோவிலை ஒட்டிய கடையில் விற்பனை சிறப்பாக இருந்த்து. சுக்கு காபி, வெள்ளரி, சர்பத், மிராண்டா வகைகள், வாழைப்பழம் என அனைத்தும் கிடைத்தது.
காலிப்பயல்கள் ஆங்காங்கு புகை விட்டுக்கொண்டிருந்தனர். நாங்கள் உட்காரவில்லை. ஏற்கனவே திட்டமிட்டபடி எங்கும் உட்காரக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தோம். சற்று நேரம் நின்றுகொண்டிருந்தோம். ‘ இனிமேல சிரம்மில்லை, 2வது மலை கொஞ்சம் ஈசியாகவே இருக்கும் என்றார் தங்கவேல் சார்.
வழி எங்க சார் என்றேன். அங்கே என்றார்.. பாதை இருண்டு கிடந்த்து. அமாவாசை இருட்டில் பால் வெளி மண்டலம் தலைக்கு நேர்மேலே வந்துகொண்டிருந்தது. காமிராவை எடுத்து பல்ப் டைம் செட் செய்து பால்வெளி மண்டலத்தினை போட்டோ எடுக்கலாமா என யோசித்தேன். கைகள் நடுங்கிகொண்டிருந்த்து. படம் நிச்சயம் நன்றாக வராது. தோள் பையை நன்கு இருக்கிக்கட்டி, தண்ணீர் குடித்து, திரும்பி புன்னகைத்து “போலாம் சார்” என்றேன். ஒரு முனிவர் போல “ஆம் அவ்வாறே ஆகுக” என்றார்.. இரண்டாவது மலையை நோக்கி நடக்கத் தொடங்கினோம்.
4
----------------------------------------------------------------------------------------------------------------------
இரண்டாவது மலை ஒரு திறந்த சமவெளிபகுதி போல நீண்டு சென்று கொண்டிருந்தது.
சிக்காடா எனும் சில்வண்டின் ரீங்காரம் அடர்த்தியாக கேட்டுக்கொண்டிருந்தது. மரங்களின் அடர்வு ஆங்காங்கே சற்று குறைந்திருந்தது.
வளைந்து திரும்பிய பாதையில் ஒரு பருத்த மரம் வேருடன் வீழ்ந்து கிடந்தது. ஒரு காம்பெளண்டு சுவரை தாண்டுவது போல மெல்ல ஏறி மரத்தினை தாண்டினோம். பாதை சரேலென கீழிரங்கி பின் மெதுவாக மேலேறிய ஒரு பெரிய பாறையின் அடியில் கொண்டுவிட்டது.
அதுதான் வழுக்குப்பாறை, பெயருக்கேற்றார்போல எவ்வித பிடிமானமின்றி உருட்டிவைத்த உருண்டையாக பாறை இருந்தது. நல்லவேளையாக படிகளை வெட்டிவைத்திருந்தனர். 1970க்கு முன்பு படிகள் இல்லை எனவே பாறை உச்சியிலிருந்து தொங்கும் கயிறு மற்றும் இரும்பு சங்கிலியினை பிடித்தபடி பக்த கோடிகள் ஏறுவார்களாம். பெயர்தான் வழுக்குப்பாறையே தவிர அது பாறையல்ல ஒரு குட்டி மலை. நடக்க நடக்க சென்று கொண்டே இருந்தது. ஒரு 20 நிமிட பயணத்திற்கு பிறகு மீண்டும் செங்குத்தாக மேல் நோக்கிய படிகள் முதல் மலையினை நினைவுபடுத்தியது. படிகள் படிகளாக இல்லாமல் கரடு முரடான கற்களை மேல் நோக்கி அடுக்கியதுபோல இருந்த்து. நெஞ்சுவரை கால் மடக்கி குச்சியை பள்ளத்தில் ஊண்றி கைபிடித்து மெல்ல ஏறிக்கொண்டிருந்தோம்.
சோர்வின் உச்சத்தில் இடுப்பில் கையூண்றி ஆயாசமாக டார்ச்சை மேல்நோக்கி அடித்து பாதையை பார்க்கும் வேளையில் தங்கவேல் சார் “ இன்னும் ஒரு படி மட்டுமே, அந்த எண்ணத்துடன் ஏறுங்கள்” என அசராமல் கூறுவார். ஒருமணி நேரபயணம், பாதை இன்னும் செங்குத்தாகவே ஏறியது. கூடுதலாக இருபுறமும் நல்ல அடர்ந்த மரங்கள்.
வெகு தூரத்திலிருந்து ஒரு தீனமான ஒலி விட்டு விட்டு வந்தது. பிறகு ஏற ஏற சப்தம் அதிகமாகிக்கொண்டே வந்தது. அடித்தொண்டையிலிருது விக்கல் எடுப்பது போலவும் பிளிறுவது போலவும் ஒலி, மிக சப்தமாக, வெகு அருகில். டார்ச்சை அனைத்து அப்படியே நின்றோம்.
துணைக்கு வேறு எவரேனும் கீழிருந்து வருகிறார்களா என காத்திருந்தோம். யாரும் வரவில்லை. அது பறவையின் ஒலியில்லை ஏனெனில் சப்தம் தரையிலிருந்தே வந்தது. நிச்சயமாக ஏதேனும் பாலுட்டியாக இருக்கலாம். நான் அது யானையாக இருக்கும் என அனுமானித்தேன். நல்லவேளையாக காற்று எங்களுக்கு எதிர் திசையில் இருந்து வந்தது. எனவே எந்த மிருகமாக இருந்தாலும் எங்களை கண்டுபிடிப்பது சிரமமே. பிறகு எந்த அளவில் வேகமாக செல்லமுடியுமோ அந்த அளவில் வேகமாகவும் ஓசைப்படாமலும் நடந்தோம். ஒலி கூடவே வருவது போல பிரமை.
மேலிருந்து விளக்கின் வெளிச்சம், சப்தமான தெளிவற்ற பேச்சு சப்தங்கள். டார்ச்சை அடித்தேன். ஒரு குடிசையும் அதன் அருகில் பாம்பாட்டி சுனை என்ற பலகையும் தென்பட்டது. வெற்றிகரமாக இரண்டாவது மலையினையும் கடந்து விட்டோம். கடையில் சுக்குகாபி சாப்பிட்டபடி “கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி பெரிய சத்தம் வந்ததே, யானையா?” என்றேன். கடையிலிருந்தவர் பதற்றமாக ’இல்லை மான்’ என்றார். நான் நம்பவில்லை என்பதை புரிந்து கொண்டார்.
ஆம் யானைகள் அதிகமாக உலாவும் இடம் வெள்ளியங்கிரி. பல வேளைகளில் கடைகளை எல்லாம் இடித்து தள்ளிவிடும். பாம்பாட்டி சுனையுக்கு சற்று மேலே 3வது மலைக்கு செல்லும் பாதை தென்பட்டது. அது பாதையல்ல. ஒரு சுவர். மெல்ல கடந்து மேலேறிய பிறகு, தங்கவேல் சார் இனிமே பிரச்சனை இல்லை என்றார். முழுபொய் என்றேன்.
5
----------------------------------------------------------------------------------------------------------------------
ஒரு பெருமழையில் பெயர்ந்த கற்கள் குவியலாக மாறி படியென அமைந்து மூன்றாவது மலை ஆரம்பித்தது. மரங்கள் அடர்ந்து பாதையின் இருபுறமும் சுவர்போல இருந்தது. வலிய வேங்கை மரங்கள் கூட்டம் கூட்டமாக நின்றிருந்தது. எங்க வீட்டு பிள்ளை எம் ஜி ஆர், நம்பியாரை அடித்தது போல வேங்கை மரத்தில் வரி வரியான தழும்புகள். ஆம் அங்குள மலைவாழ் மக்கள் அவற்றிலுருந்து பால் எடுப்பதற்காக பட்டையினை உரித்துவைத்துள்ளனர்.
நல்ல வேளை மலையேறும் பொது மக்களுக்கு தெரிந்தால் பட்டைக்கு பதிலாக மரத்தையே உரித்து எடுத்திருப்பார்கள். மரங்கள் அடர்ந்திருந்ததால் இருட்டு மேலும் கருமை அடைந்திருந்தது. இயந்திரம் போல கால்கள் மேலேறிக்கொண்டிருந்தது.
அரைமணி நேரம் நடந்தபிறகு கைதட்டி சுனையினை பார்த்தோம். சுனை நீர்தேங்கிய குட்டையாக இல்ல்லாமல் ஒரு ஊற்றுபோல இருந்த்து. அதில் ஒரு மூங்கில் குழாயினை கட்டி ஒரு பைப் போல மாற்றியிருந்தனர். சுனையில் கைதட்டினால் நீர் அதிகம் வரும் என்றார்கள் – உண்மையா என கண்டறிய முடியவில்லை. ஏறி வந்த களைப்பு தண்ணீரை ஒரு அரிய பொருளாக மாற்றி இருந்த்து. சுனையில் நீர் குடித்தோம், சுவை நாக்கில்பட்டு உடல் முழுவதும் பரவியது.
மூன்றாவது மலை சற்று சிறிய மலை. ஒரு நேர்குத்தான படிகளில் ஏறி ஒரு சமதளபரப்பை வந்தடைந்தோம்.
3வது மலை முடிவிற்கு வந்தது. அங்கும் கடை இருந்தது. கடையில் மோர் இருந்தது. மோரும் தயிரும் என்ன ஆனாலும் பிறர் வீடுகளிளோ, கடைகளிளோ சாப்பிடமாட்டேன். ஏனெனில் தயிர் தகைவதும் மோர் பெருக்குவதும் செய்வதற்கு எளிதாக இருந்தாலும் உண்மையில் எளிதான வேளை அல்ல. சமையலில் பழுத்த அனுபவம் வாய்ந்தவர்களால் மட்டுமே ஒரு நல்ல தயிரையும் மோரையும் உருவாக்க முடியும். நவீன யுகத்தில் தயிரை உடைந்து தண்ணீர் சேர்த்து நீர்த்தால் மோர் என்ற மடமையான செயல்பாடு உள்ளது.
கடையில் மோர் நன்றாக இருந்தது. மிகச்சரியான புளிப்பு, நுண்ணிய அளவில் லாக்டோஸின் இணிப்பு, அளவான நீர், பாலடையில்லா தெளிந்த கரைசல், அற்புதமான பி.ஹெச் – மனதார பாராட்டினேன். நேரம் இரண்டு மணி. கடைக்கு அருகிலேயே பலர் தூங்கிக்கொண்டிருந்தனர். குளிர் வாட்டியெடுத்தால் கால்களை குறுக்கி நெஞ்சொடு சேர்த்து போர்வையை மூடி ஏதோ ஒரு மூட்டை போல மனிதர்கள் மல்லாந்திருந்தனர்.
அதுக்குள்ளவே தூக்கமா என்று கடிகாரத்தை பார்த்தேன் மணி நள்ளிரவு 2 மணி. பகீரென்றது இவ்வளவு நேரமாகிவிட்டாதா?? காலைக்குள் போய் சேரமுடியுமா என்ற அச்சமும், இவ்வளவு நேரமாகியும் தூக்கத்தின் அறிகுறிகளோ களைப்பின் முகாந்திரமோ இல்லாது குறித்து ஆச்சிரியமும் அடைந்தேன். ஆனால் நினைத்தாலும் அவ்வளவு எளிதாக தூங்கமுடியாது என பிறகு புரிந்துகொண்டேன்.
ஒரு கணம் நடப்பதை நிறுத்தினாலும் குளிர் ஊசிபோல ஊடுருவி நடுங்கவைத்துவிடும். இத்தனைக்கும் மூன்றாவது மலை மணிபூரகத்தின் தன்மையான அக்னி அம்சம் நிறைந்தது என்பார்கள். கட்டுக்கதை என நினைத்துகொண்டேன். ஒருவேளை மேலே போக போக இதைவிட குளிராக இன்னும் இருக்குமோ??? இப்போது பாதை ஒரு ஒற்றையடி பாதை போலவும் இருபுறமும் புற்கள் நிறைந்தும் புற்களுக்கு கீழே டார்ச் அடிந்தாலும் விலாகாத இருளடர்ந்த பள்ளத்தாக்கும் உடன் வந்து கொண்டிருந்தது.
ஒரு நீண்ட நடைக்கு பிறகு மிகவும் விசாலமான புல்வெளிபிரதேசம் தென்பட்டது. ஆம் அதுவே 4ஆம் மலையின் துவக்கம். ஏற்ற இறக்கம் இல்லை ஒரே சமதளம். ஒருபுறம் அடர்ந்த காடு மறுபுறம் பள்ளத்தாக்கு. அடர்ந்த காடுகளுக்குள் என்ன இருக்கும். இந்த இருட்டில் போகும் மனிதர்களை பார்த்துகொண்டிருக்குமா? இருளில் காடு விழித்து வெறித்து பார்ப்பது போல இருந்தது. பதறி நடந்தேன். வளைந்தும் நெளிந்தும் ஒரு கரிய பாம்பு கிடப்பது போல பாதை நீண்டது.
ஒரு அரை மணி நேரத்திற்கு பிறகு 4ஆவதுமலை முடிவிற்கு வந்துவிட்டது. 5வது மலை சமதளமாக இல்லாமல் கீழிறங்கியது. அருவி கொட்டும் பாறையின் நுனியினை போல ஒரு அரைவட்ட பாறை விளிம்பில் பாதை முடிந்தது. கிடு கிடு பள்ளம். ஏழெட்டு டார்ச் ஒளிகள் ஸ்டார்வார்ஸ் சண்டைக்காட்சி போல குறுக்கே கலந்து பள்ளத்தின் ஆழத்தினை கணக்கெடுத்தது. ஒரு பெரிய கூட்டம் பள்ளத்தில் இறக்க பம்மிக்கொண்டிருந்தது. பின் மெதுவாக ஒவ்வொருவராக சர்வ ஜாக்கிரதையாக இறங்கிக்கொண்டிருந்தனர்.
கற்கள் பெயர்ந்தாலோ அல்லது கால் வழுக்கி விழுந்தாலோ என்ன ஆகும் என கற்பனை செய்யக்கூட முடியவில்லை. வெள்ளியங்கிரி ஆண்டவரை கூவிக்கொண்டே கூட்டம் தாண்டி சென்றது. பிறகு நின்றும் குனிந்தும் வளைந்தும் உட்கார்ந்தும் தாவியும் பாறையினை கட்டித் தழுவியும் ஒருவழியாக நாங்களும் கடந்தோம். சிறிது தூரம் சென்றதும் முன்பு பார்த்ததைவிட பெரிய பள்ளம்.
அட கடவுளே. திரும்பவும் அதே எச்சரிக்கையும் கூடுதல் அட்ரீனலினலும் கலந்து இறங்கினோம். அப்பா இந்த பள்ளம் மட்டுமே ஒரு மலை ஏறியதற்கு சமமாகும் என நினைத்துகொண்டேன். ஆனால் பிரச்சனை அவ்வளவு எளிதாக விடுவதாக இல்லை.
ஒரு நீண்ட சமதள பயனத்திற்கு பிறகு அதே போன்ற ஒரு பள்ளம். ஆனால் அவ்வளவு ஆழம் இல்லை. பள்ளத்தில் இறங்கி பழகிவிட்டதால். எளிதாக கடந்தோம். பிறகு லேசாக மலை கீழிறங்க ஆரம்பித்தது.
இதுவரை ஏறிய பழக்கப்பட்டிருந்த கால்கள் இறக்கத்தை பார்த்தவுடன் தறிகெட்டு இறங்க முயற்சித்து, விரைத்து பிடித்துகொண்டது. இறங்குவது அவ்வளவு எளிதானது அல்ல என தோன்றியது. சற்று தொலைவில் இருளில் ஒரு கரிய பூதம் போல ஒரு பெரும் பாறை உருளத்தயாராக இருந்தது. டார்ச் அடித்துப்பார்த்தோம்.
ஏறக்குறைய ஒரு பந்து ஆனால் எப்படி உருளாமல் இருக்கிறது என தெரியவில்லை. அது பீமன் தனது அஞ்ஞாத வாசத்தில் தின்று மிச்சம் வைத்த களியுரண்டையின் ஒரு பகுதி என்றார்கள்.
5வது மலையில் அங்காங்கே பெரும் பெரும் பள்ளங்கள் இருந்தது. பள்ளங்கள் எல்லாம் நல்ல வெண்மை நிறத்துடன் இருந்தது. 5ஆம் மலை சுண்னாம்பு பாறையால் ஆனது என தெரிந்தது. அந்த பள்ளம் எல்லாம் கரடி நோண்டியதோ, யானை தன் தந்தத்தால் பறித்ததோ இல்லை. எல்லாம் மனிதர்கள் செயல். சுண்ணாம்பு பாறையை நோண்டி திரு நீறு எடுத்திருக்கிறார்கள்.
சைவ மரபுப் படி மண்ணை திருநீராக அணியலாம் என்றாலும் சுண்ணாம்பை மணலை பூசமுடியுமா என தெரியவில்லை. எது எப்படியோ அந்த மண்ணின் ஒரு பிடி மலையின் அனுக்க மாதிரி என்பதால் நம்முடன் கொண்டு வரலாம். மரங்கள் அடர்ந்து வர ஆரம்பித்தது. வானத்தை கூட பார்க்கமுடியவில்லை.
வெகுதூரத்தில் பேச்சு சப்தங்கள். நீர் சலசலத்து ஓடும் ஒலி. பாதையில் நடுவில் வீழ்ந்து கிடந்த ஒரு பெரிய மரத்தை தாண்டியவுடன் மணிதர்கள் கூட்டமாக நின்று கொண்டிருந்தனர். சற்று தள்ளி தடாகம் போல் இல்லாமலும் வாய்க்கால் போல ஓடாமலும் ஒரு சுனையினை கண்டோம். அது புனிதத்தின் உச்சமாக கருதப்படும் ஆண்டி சுனை.
6
-----------------------------------------------------------------------------------------------------------------------
ஆண்டி சுனை, வெள்ளியங்கிரிக்கு ஒரு மினியேச்சர் மனசரோவர்.
ஒரு அறுபதடி நீளமுள்ள நீண்ட வாய்க்கால் போன்ற அமைப்பு. அதில் 20 அடிக்கு சிறிய நீர்த்தேக்கம் போல நீரைத் தேக்கி வைத்திருந்தார்கள். தேங்கி வழிந்த நீர் மேற்கு நோக்கி சென்று மறைகிறது.
நீரை தேக்கி வைத்துள்ள இடம் வெறும் 3 அடி ஆழமே உடையது. இரவு 3 மணியளவில் வாட்டும் குளிரில் சுனையினை வந்தடைந்தோம். கருமை படர்ந்த நீருக்குமேல் வெண்புகையென பனி படர்ந்திருந்தது. குளிக்க நினைத்து காலை விட்டவர்கள் நீரின் குளுமை கண்டு பீதியடைந்து தலையில் தெளித்து சென்றுகொண்டிருந்தனர். தங்கவேல் சார் காலையிலே குளித்துவிட்டதாக கூறினார்.
ஒரு கணமும் தாமதிக்காமல் ஆணவம் கண்மம் மாயை ஆகிய மும்மலத்துடன் உடைகளையும் கழற்றி நடுங்கும் உடலுடன் சுனையில் கால் நனைத்து அப்படியே நெடுஞ்சான்கிடையாக விழுந்தேன். சுனையின் அதீத குளுமை தீயைப் போல சுட்டது. நீருக்குள் மயிர்கால் விரைத்து அதன் வேர் வழியே வெப்பம் புகுந்து தோலை துளைத்து எலும்பின் மஜ்ஜை வரை ஊடறுத்துச் சென்றது. பத்து நொடிகள் அசைவற்று மூழ்கியிருந்து பின் எழுந்து மும்முறை நீர்புகுந்து மேலெலுந்தேன்.
உடைமாற்றி ஆரஞ்சு சுளையினை விழுங்கி குளுக்கோஸை கொட்டிக்கொண்டு மீண்டும் நடக்க ஆரம்பித்தோம். மலை மேலும் வேகமாக கீழிறங்க ஆரம்பித்தது. மிக நீண்டதொலைவில் வானத்தில் அவ்வப்போது நட்சத்திரங்கள் தோன்றி மறைந்தன. ஆனால் அது நட்சத்திரமாக இருப்பதற்கு வாய்பில்லை. ஏனெனில் பால்வெளி மண்டலம் வேறு ஒரு கோணத்தில் நீண்ட தொலைவில் ஒரு ஒளிப்பட்டையாக மிளிர்ந்து கொண்டிருந்தது. மீண்டும் வானத்தில் அவ்வப்போது வெளிச்சம். ஆச்சரியமாக கூவினேன்
“ சார் இது நம்ம மகரஜோதி செட்டப் மாதிரியே இருக்கே” என்றேன். இல்லை ஆட்கள் நடந்து கொண்டிருக்கிறார்கள் என்றார். வானத்திலா என்று கிண்டலாக கேட்டேன். இல்லை ஏழாவது மலையில் என்றார்.
திடுக்கிட்டு மீண்டும் பார்த்தேன், வெகு உயரத்தில் வெளிச்சங்கள் மின் மின் பூச்சிகள் போல மின்னியது. மீண்டும் நடை , கீழிறங்கிய மலை பின் சமதளமாக சென்றது. வலது புறத்தில் காடு அடர்ந்து வினோத ஒலியெலிப்பிக்கொண்டிருந்த்து. சற்று தள்ளி ஒரு கடை , இதுவே கடைசி கடை ,ஏழாவது மலையில் கடை ஏதும் இல்லை என்பதால் கூட்டமாக இருந்த்து. பக்த கோடிகள் காபியா டீயா என பகுத்தறிய இயலா நிலையில் உள்ள திரவ வஸ்துவை உறிஞ்சிக்கொண்டிருந்தனர். வெறும் 5 ரூபாய் முக மதிப்புடைய சுக்குகாபியை இருபது ரூபாய் சந்தைவிலை கொடுத்து பருகினோம்.
நீண்ட நடைக்கு பிறகு புவியமைப்பு மாறுவது தெரிந்த்து. மரங்கள் எண்ணிக்கை குறைந்துகொண்டே வந்தது. மண் சற்று பிசுபிசுத்து இருந்தது. கையிலெடுதுப் பார்த்தேன். களிமண் மற்றும் கொல்லுவியல் மண். இப்போது ஏழவது மலையில் உள்ளோம் என தெரிந்தது. பயணத்தின் இறுதியினை நெருங்கிவிட்டோம் என மகிழ்ந்தாலும், எதிரே தெரிந்த பாதை மற்றுமொரு பெரும் இடர் நிறை பயனத்திற்கு அறை கூவல் விடுப்பது போலிருந்தது.
பாதையற்ற பாதையாக மெல்லிய கோடாக அவ்வப்போது மறைந்தும் நெளிந்தும் பாதை வளர்ந்தது. தூரத்தில் தூசிபோல ஏதோ நெருங்கி வந்தது. அது மேக மூட்டம், அடர்பனியினை ஒரு போர்வை போல போர்த்தி சென்றது.
சட்டன மாறிய வானிலையில் 10 அடிக்கு அப்பால் என்னவென்று தெரியாத பயனத்தை மேற்கொண்டோம். டார்ச் அடித்து பாதையை பார்த்தால் ஒரு அடியிலேயே வெளிச்சம் சிதறி ஒரு கூம்பு போல அதன் ஒளித்தடம் மாறி அதில் பனித்துளிகள் ஒளிர்ந்த்து. வாட்சில் மணி தெரியவில்லை. அதற்குள்ளும் பனி படர்ந்திருந்த்து. கைச்சூட்டில் பனி விலக்கி மனி பார்த்தேன் மணி 3.30 பயனம் அசாத்தியமாக மாறிக்கொண்டிருந்த்து.
லார்ட் ஆப் தி ரிங்கஸ் கதையில் (படத்தில்) ப்ராடோவும் சாமும் மோதிரத்தினை அழிக்க மர்டோர் நோக்கி செல்லும் காட்சி நினைவிற்கு வந்தது. இப்போது பாறை அங்கங்கு தென்பட ஆரம்பித்தது. அவையெல்லம் உறுதியற்ற பாறைகள்.
ஒரு உருகும் ஐஸ்கிரீமில் உள்ள வால்நட்டை போல பாறைகள் அக்களிமண் மலையில் செருகிவைக்கப்பட்டது போல இருந்தது. முதல்நாள் பெய்த மழையின் ஈரம் மண்ணுள் இருந்தது. ஒரு திருப்பதில் தவறிகால்வைத்து உருண்ட கற்கள் சரிவில் சென்றுகொண்டே இருந்தது. மீளமுடியா பெரும்பள்ளத்தின் விளிம்பில் வெறும் குச்சியினையும் டார்ச் விளக்கை வைத்து மட்டுமே சென்றுகொண்டிருக்கிறோம் என உறைத்த்து.
குளிர் மேலே செல்ல செல்ல தீவிரமாகியது. எப்படியும் 12லிருந்து 13 செண்டிகிரேட் வரை இருக்கலாம். பனிபுகை ஒரு புயலென மேலிய சீழ்கை சப்த்ததுடன் அமானுஷ்யமாக அடித்துகொண்டிருந்த்து. வெகு நேரமாக ஒன்றை கவனிக்காமல் விட்டுவிட்டோம் அது எங்களைத் தவிர வேறு யாரும் அரைமணி நேரமாக தென்படவில்லை.
அப்படியென்றால் வழிமாறிவிட்டோமா. பாதையினை டார்ச் அடித்து கவனமாக ஆராய்ந்தேன். புதிதாக எவ்வித காலடித்தடமின்றி இருந்த்து. சிறு செடிகள் முனை மடியாமல் நிமிர்ந்து நின்றது. யாரும் செல்லாத வழியில் போவதாக தோன்றியது. தங்கவேல் சார் கலவரமடைந்து மெல்லிய குரலில் “இது சத்குரு குகைக்கு போற வழி அனேகமா இது மலைக்கு நேர்பின்னால் செல்லும்” என்றார். என்ன பிரச்சனை என்றேன்.
அது ஒரு மாபெரும் பள்த்தாக்கின் நுனியில் உள்ள குகை. இன்னும் சொல்லப்போனால் அவதார் படத்தில் வரும் தொங்கும் பாறை போன்றது. சற்று தவறினாலும் ஒரு கிலோமீட்டர் நேராக வீழ்வோம் என்றார். நிச்சயமாக திரும்பி போக முடியாது. என்ன செய்வதென தெரியாமல் பாறையில் உட்கார்ந்தோம்.
”நா அப்பவே சொல்லல! இதுக்குதான் பகலில் வரனும்” என சாத்தான் மனதில் கூவியது. ஒரே வழி. விவேக் பானியில் மெட்ராஸுக்கு மொத்தம் 6 நம்பர்தான் போனை போடு என்பது போல மலை சரியான கூம்பு வடிவத்தில் இருந்த்து. பாதை கூம்பை சுற்றி வட்ட வட்டமாக மேலேறுகிறது. நாம ஏன் நேர்குத்தாக ஏறக்கூடாது?? சரியான சவால் பின் நேர்மேலே கயிற்றில் ஏறுவது போல நீட்டிக்கொண்டிருக்கும் பாறையில் கால் வைத்து கை வைத்து கழி ஊண்றி கொட்டும் பனியில் மேலேறிகொண்டிருந்தோம்.
ஒரு ஐந்து நிமிடத்தில் பாதையினை பிடித்துவிட்டோம். மேலிருந்து ஒரு கூட்டம் கீழிறங்கியது. தேவலோகத்தில் இருந்து வருவது போல இருந்தது. இன்னும் எவ்வளவு தூரம் என்று கேட்டோம். அவர்கள் மையமாக பக்கம்தான் என்றார்கள். இப்போது அவர்கள் இன்னும் எவ்வளவு தூரம் கீழறங்கனும் என்றார்கள், இப்போது எங்கள் முறை “ கொஞ்சதூரம் தான் சீக்கிரம் இறங்கிறாலாம்” என்றோம். அரை மணி நேரத்திற்கொருமுறை இதே கேள்வியை இறங்குபவர்களிடம் கேட்பதுவும் அவர்களும் அதே பல்லவியினை பாடுவதும் நடந்தேறியது.
ஊதல் சப்த்த்துடன் பனிக்காற்று சுழற்றியடிக்க காலில் மென்மையான ஏதோ ஒன்று உரசி சென்றது. பனி மூட்டத்தில் என்னவென்று தெரியவில்லை. பிறகு 10 அடி தொலைவில் இருந்த பாறையில் அது கம்பீரமாக நின்று கொண்டிருந்த்து. அது ஒரு நாட்டு நாய்… ஆம் நாய்தான். ஆனால் இவ்வளவு தொலைவு மேலேறுவதை நினைத்து ஆச்சரியமாக இருந்த்து. நாய்க்கு பின்னால் ஒரு மனிதன் போகவும் அவனை பின் தொடர்ந்து நாயும் சென்றது.
”நாய் உங்களடோதா?” என்றேன். ”இல்ல என் பின்னாடியே வருது. எனக்கு வழிகாட்டிக்கொண்டே போவுது” என்றார். பிறகு இருவரும் மேலேறி நடந்து பனியில் மறைந்து போனார்கள். ”சார் நல்ல கவனிங்க இந்த 2 பேர்ல யாரோ ஒரு ஆள் சித்தர்” என்றேன் வேடிக்கையாக ”அனேகமா நாய்தான் ஒரிஜினல் சித்தராக இருக்கும்” என்றார் தங்கவேல் சார்
10 ஆண்டுகளுக்கு முன் கொல்லிமலை அரப்பள்ளி ஈஸ்வரன் கோவில் அருகே மாணிக்க சித்தர் என்றும் மாட்டு சித்தர் என்றறியப்படும் நபரின் பின் பத்து பதினைந்து தொழிலதிபர்கள்/ செல்வந்தர்கள் சட்டையின்றி கருத்து தடித்த உடலில் மயிரடர்ந்த மார்பில் கனத்த தங்கச்சங்கிலி அனிந்து போலியான பணிவுடன் சுற்றிக்கொண்டிருந்தது நினைவிற்கு வந்தது.
அவர்களுக்கு மட்டும் இந்த நாய் அகப்பட்டால் நாய் சித்தர் என பெயரிட்டு இதற்கு ஒரு கோயிலை கட்டுவார்கள்.
மேலும் மேலும் மேலேறி ஒரு சரிந்த மண்பரப்பினை அடைந்தோம். மீண்டும் இரு வழிகள். நேரக சென்றோம். “வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலுக்கு செல்லும் வழி” என ஒரு புத்தம் புது வழிகாட்டு பலகை தென்பட்டது.
வந்துவிட்டோமா?? அதற்குள்ளாகவா. நீண்ட தொலைவில் இருளில் மாபெரும் மாடு ஒன்று தன் முன்னங்கால்களை மடக்கி தன் தலையினை வான் நோக்கி பார்ப்பது போல ஒரு உருவம் தோன்றியது.
காட்சி மயக்கமா கற்பனையா எனத் தெரியவில்லை மாடு தன் தலையினை மெல்ல திருப்புவது போல தோன்றியது. அது மாடல்ல ஒரு மாபெரும் பாறை. எப்பகுதியிலுருந்து பார்த்தாலும் நந்தி போல தோற்றமளிக்கும் இயற்கையான பாறை.
ஆம் அது செதுக்கப்பட்டதல்ல. இயற்கையின் தீரா விளையாட்டில் ஒரு பகுதி போல பாறை இருந்தது. பாறைக்கு கீழே படிகள் தோன்றி ஆலயத்திற்கு சென்றது. அருமை நண்பர் தனசேகரன் தன் குழுவினருடன் நின்று கொண்டிருந்தார்.
ஒரு தூய புன்னகையும் குழந்தையின் சிரிப்புடனும் வரவேற்றார். பாறையில் செதுக்கப்பட்ட படிகள் ஆண்டவரின் சந்நிதானம் நோக்கி நீண்டது. படிகளின் வழியே இரு சாதுக்கள் முகம் நிறைந்த திருநீற்றுடன் என்னை வெறித்து நோக்கி கடந்து சென்றனர். மயிர் சிலிர்ப்படைந்து உடல் ஆடியது. மனதின் நீண்ட ஆழத்தில் எவரோ என்பெலாம் உருகும் அன்பர்தம் கூட்டத்தில் என்னையும் புணர்ப்பவன் கோவில் என்று அரற்றுவது கேட்டது. அது நான்தான் என்று பின்பு அறிந்தேன்.
கனவின் வெளியில் நின்று கொண்டிருக்கிறேன். காலம் பனிப்புகையென என்னை கடந்து சென்று கொண்டிருந்தது.
7
--------------------------------------------------------------------------------------------------------------------
மணி 5. இன்னும் விடியவில்லை.
நந்தி பாறையிலிருந்து கோவில் நோக்கி செல்லும் படிநெடுக கூட்டம் களைத்தும் சோர்ந்தும் நின்றிருந்தது.
கூட்டத்திற்கு அப்பால் வேல்களை வரிசையாக செருகி வைத்த வேலிக்குட்புறமாக கைகூப்பிய நிலையில் நின்று பக்த கோடிகள் கும்பிட்டுகொண்டிருந்தனர்.
6000 அடிக்கு உரித்தான குளிர் வாட்டிக்கொண்டிருந்தது. கூட்டம் குறையட்டும் என்று பாறையின் ஓரமாக அமர்ந்தேன். ”சாமி இங்க உக்காரதீங்க! ரத்தம் உறியற அட்டை நிறைய இருக்கும்” என்றபடி பூசாரிபோல் தோற்றமளித்த நபர் கடந்து சென்றார்.
உடன் உட்கார்ந்திருந்தவர்கள் பதறியப்டி எழுந்து உடைகளை உதறினார்கள். சலிப்படைந்து மேலும் அமைதியாக அமர்ந்தேன். அந்த சூழலில் ஹிர்டுனியா வாழ்வதற்கான வாய்ப்பே இல்லை. குறுகிய இடத்தில் கூட்டம் சேரவிடகூடாது என்ற முனைப்பில் கோவில் பூசாரிகள் எப்படியாவது ஆட்களை துரத்தி விடுவதற்காக இது போன்ற கதைகளை கட்டிவிடுகிறார்கள் என புரிந்து கொண்டேன். பொய்யர்களும் அயோக்கியர்களும் சர்வ வியாபி என்பது கண்கூடு.
ஏறக்குறைய 7 மணி நேரமாக சுமந்த பையை கழற்றி கீழேவைத்தேன். ஏதோ என் உடலை உதறி சர்வாத்மாகவும் சர்வ சுதந்திரமாகவும் இருப்பது போல இருந்தது. பின் நானும் தங்கவேல் சாரும் கூம்பிட்ட கரங்களுடன் சந்நிதானத்தின் முன் நின்றோம்.
பாறையின் உட்குழிவு குகை போன்று தோற்றம் காட்டி கோவில் அமைந்திருந்தது. மொத்தமாக ஒரு 20 சதுர அடி இருக்கலாம். குகையினுள் நிமிர்ந்து நிற்கமுடியாது. உட்காரும் அளவிற்கே அதன் உயரம் அமைந்திருந்த்து. குகையின் தரை முழுவதும் வில்வ இலைகளால் நிரம்பி இருந்த்து.
வில்வ இலைக் குவியலின் நடுவே மொட்டு மலர்வது போல 3 சிவலிங்கங்கள் அரும்பி இருந்தது. சுயம்பாக உருவான லிங்கம் என்பதால் ஆவுடையார் இல்லை. பிரம்ம பாகமும் விஷ்னு பாகமும் ஒரு வேளை பாறைக்குள் இருக்கலாம். ருத்ரபாகம் மட்டுமே வெளியில் தெரிகிறது.
இந்த 3 லிங்கங்கள் தவிர வெளியில் உள்ள இருபெரும் பாறைகளை லிங்கமாக கணக்கில் கொண்டால் மொத்தம் 5 லிங்கங்கள் அடங்கிய பஞ்ச லிங்க தலமாக வெள்ளியங்கிரியை கொள்ளலாம்.
முறைப்படி முதல் மரியாதை கனபதிக்கு என்பதால் கோவிலைக் கடந்து சற்று மேலேறி தோரணவாயில் கனபதியினை பார்க்க சென்றோம். கனபதி சிலை தற்காலத்தில் நிறுவப்பட்டதால், அவ்வளவாக என்னை ஈர்க்கவில்லை. ஆனால் அந்த இடம் அதிஅற்புதமான இயற்கை கட்டமைப்பில் இருந்த்து. ஒரு பெரும் பாறையினை கோடாலியால் பிளந்து பிரிந்து வைத்து அதன் இடைவெளியில் மாபெரும் தட்டையான கல்லால் ஒரு கூரை செய்தால் எப்படி இருக்கும் என கற்பனை செய்து பாருங்கள். ஆம் அப்படியே அமைந்திருந்த்து. அந்த பாறை இடைவெளியில் எப்படி ஒரு தட்டையான கல்லை மிகச்சரியான படுக்கை வசத்தில் இயற்கை வைத்துள்ளது என்பது ஆச்சரியமான ஒன்றே.
பிறகு மீண்டு கீழிறங்கி திருமூலட்டானத்தினை அடைந்தோம். பருத்த மனிதர் நெற்றி நிறைந்த விபூதியுடனும் காவிப்பல் சிரிப்புமாக அமர்ந்திருந்தார். பருத்த வயிறு சம்மனமிட்டு அமர்ந்த துடையின்மேல் உட்கார்ந்திருந்த்து. அந்த இடைவெளியில் நூலிலைபோன்ற அவரது கோவனம் மறைந்து போனதால் அவர் சம்மனமிட்டு அமர்ந்திருந்தாரா அல்லது அம்மனமிட்டு அமர்ந்திருந்தாரா என கண்டறிய இயலவில்லை.
அருகில் சென்ற உடன் கையள்ளி திருநீறெடுத்து புருவமத்தியினை அழுத்தி நெற்றி நிறைய பூசிவிட்டு வெள்ளந்தியாக சிரித்தார். பல்லாண்டுகளுக்கு முன் முதன்முறையாக சிதம்பரம் கோவிலில் கேட்ட என்று வந்தாய் என்ற தேவரப்பாடல் மின்னி மறைந்தது.
நான் சிவனருட் செல்வனில்லை, என்பெலாம் உருகும் அன்பர்தம் கூட்டத்தில் என்னையும் புணர்பவன் என்று பொய்யுரைக்கவும் துணிபவன் அல்ல இருந்தும் ஏதோ ஒரு மாயவலையில் வீழ்ந்து மையம் நோக்கி செல்லும் இரைபோல அங்கிருந்தேன். பின் மும்முறை தொழுது பின்னகர்ந்து பெருமூச்சுடன் சற்று கீழிரங்கி உட்கார்ந்தேன்.
நண்பர்கள் தனசேகரனும், கருப்பண்ணனும் வேல் வேலிக்குள் நின்று பூசை பார்க்கப்போவதாக கூறினார்கள். வேகமாக புலரும் காலை நேரத்தினை படமெடுப்பதற்காக நந்தி பாறைக்கு அருகில் சென்றேன். இருளில் கருத்த மலைகளின் விளிம்பின் வெளிச்சம் மெலிதாக படர்ந்து பின் வீறு கொண்டெழுந்து செங்கொழுந்தினைப் போல் சுடர்விட்டுக்கொண்டிருந்தது. கனத்திற்கு கனம் நிறங்கள் மாறிக்கொண்டே இருந்தது. நீலத்தில் இத்தனை வகைகளா? நீல நிறமும் காலை தென்றலும் நெஞ்சு நிறைந்த அமைதியினையும் நிறைவையும் அளித்த்து.
மேகங்கள் மலையினை மறைப்பதும் பின் மறைவதுமாக விளையாட்டுக்காட்டிக்கொண்டிருந்தது. மீண்டும் ஒருமுறை மூலட்டானம் சென்று சாமிகும்பிட தங்கவேல் சார் அழைத்தார். எனக்கு ஏனோ விருப்பமில்லை. கேமராவை அவரிடம் கொடுத்து இங்கேயே உட்கார்ந்திருப்பதாக தெரிவித்தேன்.
பாறையின் சுவரில் சரிந்து உட்கார்ந்து முதுகுப்பையினை இறக்கிவைத்தேன். பை ஒரு உயிருள்ள செல்லபிராணி போலவும் என் பொருட்டு அதுவும் என்னுடன் இருப்பதாகவும் தோன்றியது. என் கண்ணாடி, கடிகாரம் யாவும் ஜடப்பொருட்கள் என்பது மறைந்து உயிர் நிரம்பிய துணையாக தோற்றமளித்தது. ஒரு ஆழ்ந்த தன்னிரக்கம் தோன்றி உடல் தளர்வடைந்து தாங்க இயலா துயரம் பீடித்துகொண்டது. சே!! என்ன இது. பைத்தியம்தான் பிடித்துவிட்டதா என தலையினை உதறி தண்ணீர் குடித்தேன்.
தூரத்தில் ஆட்கள் இன்னமும் மேலேறிகொண்டிருந்தனர். இளைஞர்கள் கூட்டம் கூட்டமாக செல்போனில் படமெடுத்துகொண்டிருந்தனர். காலருகே ஒரு சிறு குருவி புல்லைக் கொத்திக்கொண்டிருந்தது.
மாட்ரிக்ஸில் நியோ கேட்கும் புராதானமாக மனித குலம் ஆரம்பம் தொட்டு வினவும் கேள்வியான “What is the purpose of Life” மனதில் எதிரொலித்துகொண்டிருந்தது.
தூரத்தில் தங்கவேல் சார் வந்துகொண்டிருந்தார். பின் இருவரும் பழங்கள் சாப்பிட்டு புகைப்படங்கள் எடுத்தோம்.
காலை மணி 7.00 புறப்படும் வேளை நெருங்கியது. காலடியில் மேகங்கள் தழுவிச்சென்றன. நீண்ட பெருமூச்சில் வீடு நோக்கிய பயணம் தொடங்கியது. இரவில் பார்த்த இடங்கள் வெளிச்சத்தில் வேறொன்றாக தெரிந்த்து.
பெரும் பள்ளத்தாக்கும் வழுக்கும் பாறைகளும் நாம்தான இரவில் இதை கடந்தது என வியக்க வைத்தது. இரவின் அதீத குளிரில் குளித்த ஆண்டி சுனை தெளிந்த ஓடையாக ஓடிக்கொண்டிருந்தது.
நடந்துகொண்டே இருந்தோம். ஓவ்வோரு மலையாக இறங்கினோம். நேரம் செல்ல செல்ல கால்கள் நடுங்க ஆரம்பித்தது. ஓடும் கால்களை சிரமப்பட்டும் பிடித்து நிறுத்தி மெல்ல பக்கவாட்டில் சற்று சாய்ந்து வலியின் முனகலில் படிப்படியாக கீழிறங்கினோம்.
முதல் மலையின் முழங்கால் உடைக்கும் படிக்கட்டுகளில் கால்கள் முற்றிலுமாக செயலிலந்து போல தோன்றியது. அடிவாரத்தில் இருந்து ரேடியோ சத்தம் தெளிவற்று கேட்கத் துவங்கியது. தாங்க இயலா வலியில் கால் துடிக்க அப்படியே கீழே விழுந்து அமர்ந்தேன்.
அடிவாரத்தின் கோவில் கண்ணுக்கு தெரிந்தது. வெகு தொலைவில் தங்கவேல் சார் சென்று கொண்டிருந்தார். சக்தியெல்லாம் திரட்டி படிகளை கடந்து முதல் படியின் அருகில் உள்ள கோவிலில் நட்ட கம்பத்தினை பிடித்து தடுமாறி நின்றபோது, வீபூதி தட்டுடன் பூசாரி “ சாமி விழுந்திராதீங்க! பத்திரமா போங்க!!” என்றார் தாயின் மடியில் இருந்து இறக்கிவிடப்பட்ட கைக்குழந்தை போல நின்று கொண்டிருந்தேன். மலை வெயிலில் பளபளத்துகொண்டிருந்தது. கால்களின் முன்னால் வீட்டிற்கு செல்லும் பாதை.
நிறைந்தது.
